முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜைகள் துவக்கம்

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சபரிமலை, ஜூன்.18 - பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைகள் துவங்கின. ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 15 ம் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் நிர்மால்ய தரிசனமும், சோபன மண்டபத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரு கணபதி ஹோமமும் நடத்தினார். பின்னர் ஐயப்பனுக்கு மேல் சாந்தி சசி நம்பூதிரி நெய் அபிஷேகத்தை துவக்கி வைத்தார். பக்தர்கள் அதிகளவில் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க வந்திருந்தனர். 

வரும் 20 ம் தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், படி பூஜை, உதயஸ்தமன பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், அபிஷேகம் நடைபெறும். சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருவாங்கூர் தேவசம்போர்டு செய்துள்ளது. சபரிமலையில் கடந்த வியாழக்கிழமை முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 6 மொழிகளில் பக்திப் பாடல்களை ஒளிபரப்ப தேவசம்போர்டு அனுமதி வழங்கியுள்ளது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

மழைக் காலங்களில் 18 படிகள் நனையாமல் இருக்கவும், படி பூஜை சிரமமின்றி  நடத்த வசதியாகவும் 18 படிகளுக்கும் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. வரும் 20 ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலையில் ஆனி மாத பூஜைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்