முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலில் மீன்பிடிக்க சென்ற 550 மீனவர்கள் திடீர் மாயம்

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,ஜூன்.18 - வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற இந்திய மீனவர்கள் 550 பேர்களை காணவில்லை. அவர்களை தேடும்பணியில் கடற்கரை பாதுகாப்பு படையினரும் ராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி வடகிழக்கு, கிழக்கு மாநிலங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி பலத்த காற்று வீசி வருகிறது. இதை பொருட்படுத்தாமல் மேற்குவங்காளத்தில் உள்ள தெற்கு 24 பர்கானா மாகாணத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்றுமுன்தினம் 33 படகுகளில் 550 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ஆனால் கடந்த 2 நாட்களாகியும் அவர்கள் கரைக்கு திரும்பவில்லை. அவர்களை பற்றி தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடற்கரை பாதுகாப்பு படையினர் ஒரு கப்பலில் சென்று தேடி வருகின்றனர். மேலும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் கடலில் இருந்து பலத்த காற்று வீசுகிறது. பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் காணாமல் போய் இருக்கலாம் என்று கொல்கத்தா மாவட்ட மாஜிஸ்திரேட் கவலையுடன் கூறினார். புயல் சின்னம் உருவாகி பலத்த காற்றுடன் மழை பெய்வதாலம் மேகம் சூழ்ந்திருப்பதாலும் தேடும் பணியில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றால் படகுகள் வங்கதேசத்திற்கு அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்