எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,பிப்.27 - வரும் சட்டசபை தேர்தலில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படும் என்று ஆர்.பி. உதயகுமார் கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஊமச்சிகுளத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.முருகேசன் தலைமை வகித்தார். மதுரை கிழக்கு தொகுதி கழக செயலாளர் மா.இளங்கோவன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மதுரை மாநகர் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளரும் மாநில மாணவரணி செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை எந்தவித ஆரவாரமும் ஆடம்பரமும் இல்லாமல் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள். அம்மா என்றால் கருணை, தர்மம் போன்றவையாகும். அரசியலுக்கு ஜெயலலிதா வருவதற்கு முன்பே ஏழை எளியோருக்கு உதவி செய்யும் கருணை உள்ளம் படைத்தவர். கலைத்துறையில் அவர் இருந்தபோதும் சீன யுத்தம் வந்தபோதும் ராணுவ யுத்த நிதிக்காக தான் அணிந்திருந்த நகைகளை அப்போது பிரதமராக இருந்தவரிடம் வழங்கினார். ஆனால் கருணாநிதியோ ஒரு குண்டூசியை கூட யாருக்கும் கொடுத்தது கிடையாது. தமிழகத்தில் 10 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஜெயலலிதா, விலைவாசி உயர்வு இல்லாமல் சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட்டு தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக வழிநடத்திச் சென்று பொற்கால ஆட்சியை தந்தார். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழக மக்கள் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்று கருணாநிதியின் கோரப்பிடியில் சிக்கி தமிழக மக்கள் நித்தம் நித்தம் மரண பயத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. இவற்றையெல்லாம். கருணாநிதி கண்டுகொல்லாமல் கோடி கோடியாக ஊழல் செய்து கொள்ளையடித்து வருகிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் செய்து மத்திய அரசின் கஜானாவை காலியாக்கி கருணாநிதியின் கஜானாவுக்கு மாற்றியுள்ளார் மாஜி மந்திரி ஆ.ராசா. இதைப்பற்றி மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதாவின் போர்க்குரலால் இந்த ஊழல் மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டது. அதன் பின் இந்திய தலைமை கணக்கு அதிகாரி, உச்சநீதிமன்றம் கண்டித்ததின்பேரில் ராசா, வேறுவழியின்றி கைது செய்யப்பட்டார். ஆனால் இதுவரை அவர் கொள்ளையடித்த பணத்தை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு கைப்பற்றவில்லை. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட கருணாநிதி, கனிமொழி, ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இது மிக விரைவில் நடைபெறும்.
தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி அறிவித்துள்ள இலவச திட்டங்கள் அனைத்தும் ஒரு மோசடி திட்டமாகும். இந்த இலவச திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது. அதிலும் இந்த இலவசங்கள் அனைத்தும் தி.மு.க.வினர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. வேறு எந்த முக்கிய திட்டங்களையும் கருணாநிதி செயல்படுத்தவில்லை. கருணாநிதியின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் இன்று 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கியுள்ளது. ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ. 15 ஆயிரம் கடன் சுமை உள்ளது. இதுதான் கருணாநிதியின் கபட ஆட்சியின் நிலையாகும். அதேநேரத்தில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை எண்ண முடியாது. ஆற்று மணலை கூட எண்ணி விடலாம். கருணாநிதியின் குடும்பம் சுருட்டியுள்ள சொத்துக்களை எவ்வராலும் எண்ணி சொல்லிவிட முடியாது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தை கருணாநிதி குறுக்கு வழியில் கைப்பற்றி தன்னுடைய கடும்ப சொத்தாக்கிவிட்டார். இதனை நாட்டு மக்களும் அவரது தொண்டர்களும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எனவே வரும் சட்டசபை தேர்தல் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு ஒரு முடிவு கட்டும் தேர்தலாக அமையும். இந்த தேர்தலோடு கருணாநிதி நாட்டை விட்டே ஓடி விடுவார். மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று இன்றைக்கு மக்களே பேசி வருகிறார்கள். எனவே மீண்டும் ஜெயலலிதாவின் தலைமையில் புனித ஆட்சி மலர நாம் அனைவரும் அவரது பிறந்த நாளில் அயராது பாடுபட வேண்டும் என சூளூரை ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் அ.மா.பரமசிவம், மாவட்ட மாணவரணி செயலாளர் கே.மாணிக்கம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் காசிமாயன், மாவட்ட பேரவை இணைச்செயலாளர் ஜி.கருப்பணன், மாணவரணி இணை செயலாளர் கே.பி.பூமிநாதன், ஒன்றிய இணைச்செயலாளர் கருணாமூர்த்தி, ஒன்றிய பேரவை செயலாளர் மலையாளம், வக்கீல் கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
23 Apr 2024சென்னை, பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பறவைக் காய்ச்சல், அம்மை நோய் பாதிப்புகள்: அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு
23 Apr 2024சென்னை, கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
தடையில்லாமல் குடிநீர் வழங்குவது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கலெக்டர்களுடன் ஆலோசனை
23 Apr 2024சென்னை, தடையில்லாமல் குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று 12 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
23 Apr 2024சென்னை, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
23 Apr 2024ஐதராபாத், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையில் சோதனை மேலும் தீவிரம்
23 Apr 2024சென்னை, கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் எல்லைப்பகுதிகளில் மேலும் சோதனையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.