எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,ஜூன்.18 - கடந்த 4 ம் தேதியன்று டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போது யோகா குரு பாபா ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை டெல்லி போலீசார் மறுத்திருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக டெல்லி போலீசார் நேற்று தங்களது பதில் மனுவை தாக்கல் செய்தனர். அப்போது ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை டெல்லி போலீசார் மறுத்தனர்.
பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள்தான் கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை பாபா ராம்தேவ் தூண்டி விடும் வகையில் பேசினார் என்றும் தங்கள் மனுவில் டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகத்தான் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள் என்றும் டெல்லி போலீசார் தங்களது மனுவில் கூறியுள்ளனர்.
மேலும் போலீசார் அனுமதி கொடுத்த இடத்தை தாண்டி ராம்தேவின் ஆதரவாளர்கள் 3 முறை மீறி சென்றதாகவும் அதனால்தான் இரவு 1.30 மணிக்கு அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் டெல்லி போலீஸ் ஈடுபட்டது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. போலீசார் முடிந்த அளவில் பொறுமை காத்தனர். ஆனால் நிலைமை கைமீறிப் போனதால்தான் 8 கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன என்றும் தங்களது மனுவில் டெல்லி போலீசார் விளக்கமளித்துள்ளனர். மேலும் நள்ளிரவு ஒரு மணிக்கு அனுமதி வாபஸ் பெறப்பட்ட விஷயத்தை ராம்தேவிடம் தெரிவித்தோம். 80 நிமிடங்கள் அவகாசம் கொடுத்து அவர்களை வெளியேறும்படி கூறினோம். அதன் பிறகு இரவு 2.20 மணிக்குத்தான் போலீசார் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். அதுவும் கூட அவர்களது ஆதரவாளர்கள் கல்வீசிய பிறகுதான் அவர்களை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் டெல்லி போலீசார் தங்களது மனுவில் விவரித்திருக்கிறார்கள்.
முன்னதாக ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதம் குறித்து சுப்ரீம் கோர்ட் மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை, டெல்லி போலீஸ் கமிஷனர் குப்தா, டெல்லி தலைமை செயலர் திரிபாதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து டெல்லி போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தங்களது விளக்கத்தை பதில் மனு மூலம் தாக்கல் செய்தனர். இந்த விவகாரம் வரும் 20 ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. விடுமுறை கால நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே. பட்நாயக் ஆகியோர் இந்த வழக்கை அப்போது விசாரிப்பார்கள். முன்னதாக, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த டெல்லி போலீசார் தங்களது நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையிலேயே பல கருத்துக்களை கூறியிருந்தார்கள். யோகா முகாம் நடத்துவதற்கே அனுமதிக்கப்பட்டது. மற்ற நோக்கங்களுக்காக அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தார்கள். மேலும் 5 ஆயிரம் பேர் கூடுவதற்கு மட்டுமே அனுமதி அளித்தோம். அதையும் மீறி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ராம்லீலா மைதானத்தில் கூடி விட்டார்கள் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தார்கள்.
ஊழலுக்கு எதிராகவும், கறுப்பு பணத்தை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காகவும் பாபா ராம்தேவ் 9 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். முதல் நாளன்று அவர் டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு தனது ஆசிரமத்திலேயே அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார். 9 நாள் உண்ணாவிரதம் இருந்த அவர், உடல் நிலை மோசமடைந்த நிலையில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இருப்பினும் ஊழலுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்று அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.