எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி., பிப்-27 - விளைநிலங்களை அழிக்கக் கூடாது என்று தமிழக அரசே பிரச்சாரம் செய்து விட்டு இன்று அந்த விளைநிலங்களை அழித்து திருச்சியில் திமுக மாநில மாநாடு நடத்துகிறது. விளை நிலங்களை அழித்ததால் விவசாயிகள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
திருச்சி திருவானைக்கோவில் பைபாஸ் ரோட்டில் தாகூர் தெரு அருகில் சுமார் 80 ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் இருந்தன. இந்த 80 ஏக்கர் நிலம் சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு சொந்தமானது. கொள்ளிடக் கரையோரமும், காவரி கரையோரமும் அமைந்துள்ளதால் தண்ணீருக்கு பஞ்சம் இல்லாமல் எப்போதும் பசுமையாக காட்சியளிக்கும்.
சென்னை பைபாஸ் ரோட்டோரம் இருந்த இந்த 80 ஏக்கர் விவசாய நிலங்கள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு கண்ணில் பட்டது. இந்த இடத்தை தி.மு.க. மாநில மாநாடு என்று வளைத்துப் போட திட்டமிட்டார் நேரு. அதற்கு உறுதுணையாக அப்பகுதியில் உள்ள தி.மு.க. வினர் விளைநிலங்களின் சொந்தக்காரர்களுக்கு பணத்தாசை காட்டி வளைத்துப்போட்டனர். விளைநிலங்களின் சொந்தக்காரர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர்கள் வைத்திருக்கும் நிலங்களுக்கு ஏற்ப லட்சங்கள் கைமாறியது. 2 போகம் விளையக்கூடிய இந்த பசுமையான விளைநிலம் இன்று அமைச்சரின் கைத்தடிகளால் அழிக்கப்பட்டு வருகிறது. வயிறுக்கு சோறுபோடும் விளைநிலத்தை அழித்து இந்த மாநில மாநாடு தேவைதானா? என்று விளைநிலத்தில் வேலை பார்க்கும் பெண்களும், அப்பகுதி வாசிகளும், விவசாயிகளும் கேள்வி கேட்கிறார்கள்.
திருச்சி பகுதியில் எவ்வளவோ தரிசு நிலங்கள் கிடக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு விளைந்து கொண்டு இருக்கின்ற இந்த விளைநிலங்களை அழித்து மாநாடு என்று பெயரில் ஆளும் கட்சியினர் அப்பாவி விவசாயிகளை மாநில மாநாடு என்று ஏமாற்றி அபகரிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த இடத்தில் இருந்த பாசன வாய்க்கால்களும் மாநாட்டுக்காக அழிக்கப்பட்டு உள்ளது. பரம்பரையாக இருந்த வந்த சுடுகாட்டையும் தி.மு.க. வினர் தற்போது அழித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த மாநாடு நடைபெறும் இடம் அருகில் உள்ள குடியிருப்போர் கூறியதாவது,
1. முன்னாள் கவுன்சிலர் பி. சாமிக்கண்ணு:-
நான் தலைமுறை தலைமுறையாக இந்த இடத்தில் இருந்த வருகிறேன். நல்ல விளைச்சல் தரக்கூடிய விளைநிலமாக இருந்த வந்த இந்த நிலங்கள் அழிக்கப்படுவதை பார்க்கும்போது எனக்கு கண்ணீர்தான் வருகிறது. ஏன் தி.மு.க.வினருக்கு மாநாடு நடத்த வேறு இடமே கிடைக்க வில்லையா? விளை நிலங்களைத்தான் அழிக்க வேண்டுமா? இந்த இடங்களை வைத்திருப்போரை மிரட்டி எழுதி வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. சுடுகாட்டிற்கு செல்லும் பாதை மாநாடு என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. காலம் காலமாக அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தி வரும் கொள்ளிடக்கரை சுடுகாட்டை சுரண்ட நினைக்கிறது தி.மு.க.
மாநாடு நடக்க இருப்பதால் இந்தப் பகுதி வழியாக உடல்களை கொண்டு போகக் கூடாது என்று அறிவிப்பும் செய்துள்ளனர். இதனால் திருவானைக்கோவில் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் கோபமடைந்துள்ளனர். நாங்கள் எங்கே சென்று இறந்தவர்களை புதைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிக்கொண்டு புரியாமல் தவித்து வருகின்றனர்.
விளைநிலங்களை அழித்தும் பாமர மக்களை பாடாய் படுத்தும் தி.மு.க.விற்கு இதுதான் கடைசி மாநாடாக இருக்கும் என்று தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார்.
2. ஜி.துரை:-
மாநாடு நடக்கும் இடத்தில் விளைநிலங்களை வைத்திருப்பவர் இவர். எனது நிலங்கள் நன்றாக விளைச்சல் தரக்கூடியவை தற்போது எனது நிலம் எனது தம்பி பராமரிப்பில் உள்ளது. அவரிடம் இருந்து திமுகவினர் விளைநிலத்தை பறித்து விட்டனர். விளைநிலத்தை அழிப்பது பெற்ற தாயை கொன்று புதைப்பதற்கு சமம். தண்ணீர் தட்டுப்பாடின்றி அமோகமாக விளைந்த இந்த நிலத்தை அழித்து விட்டனர். இந்த 80 ஏக்கரில் சுமார் 10 ஏக்கர்தான் காட்டுக்கருவை உள்ள இடம். மற்ற 70 ஏக்கரில் கரும்பு, நெல் ஆகியவை பயிரிடப்பட்டு இருந்தது. பாசன வாய்க்கால்கள் வரும் பாதையை திமுகவினர் மாநாடு என்ற பெயரில் அழித்து விட்டனர். தி.மு.கனரின் அட்டகாசங்கள் தற்போது தாங்க முடியவில்லை. வருகின்ற தேர்தலில் மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள். சென்னை பைபாஸ் ரோட்டோரம் அமைந்துள்ள இந்த 80 ஏக்கர் நிலத்தை மாநாடு முடிந்த பிறகு கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக காட்டவேண்டும் என்பதற்காகவும், ஊருக்குள் இந்த மாநில மாநாட்டை நடத்துகிறது திமுக.
3.கரிகாலன் (திருவானைக்கோவில் முன்னாள் அறங்காவலர்):
மாநாடு நடைபெறும் இடத்தின் அருகில் என்னுடைய வாழைத்தோட்டம் உள்ளது. இந்த வாழைத்தோட்டத்திற்கு அருகில் மாநாட்டிற்கான இடத்தை சுத்தப்படுத்திய குப்பைகளையும் குச்சிகளையும் எரித்துக்கொண்டு இருக்கின்றனர். இதனால் எனது வாழைகள் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனது தோட்டத்திற்கு அருகில் வளர்ந்து வந்து கொண்டிருந்த கரும்பை பாதியிலேயே வெட்டி எறிந்து விட்டனர். கரும்பு பயிரிடப்பட்ட விவசாயியிடம் கரும்பை அறுவடை செய்யச்சொல்லி மிரட்டியும் உள்ளனர். வேண்டும் என்றால் நஷ்ட ஈடு தருவதாகவும் கூறி உள்ளதாக தெரிய வருகிறது. பாசன வாய்க்கால்கள் அழிக்கப்பட்டு விட்டதால் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு கண்டிப்பாக
ஏற்படும் என்று தெரிவித்தார்.
ஏ.முருகன்:-
திருச்சியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தி திருச்சியை திகைக்க வைத்து கூட்டத்தை காட்டியது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை சந்தித்ததே இல்லை என்று தெரிவித்தார். அதேபோல் அனைத்து பத்திரிகைகளும் இந்த கூட்டத்தை சுட்டிக்காட்டியே எழுதியது. இதனால் கோபம் அடைந்த தி.மு.க.வினர் தானும் அதுபோல் கூட்டத்தை காட்டவேண்டும் என்று நோக்கத்தோடு ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. ஆனால் எதிர்பார்த்தப்படி கூட்டம் வரவில்லை. தி.மு.க. தலைவருக்கு இதனால் வெறுப்புதான் வந்தது. எப்படியாவது திருச்சியில் மிகப்பெரிய கூட்டத்தை காட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு மீண்டும் திருச்சியில் இந்த தி.மு.க 10 வது மாநில மாநாட்டை நடத்துகிறது. இதுவும் அவர்களுக்கு தோல்வியாகத்தான் முடியும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்