முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல் - சிதம்பரத்திற்கு பங்கில்லை

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, ஜூன்.18 - 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ப. சிதம்பரத்திற்கு பங்குண்டு என்று பாரதீய ஜனதா கட்சி கூறிய குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது. அரசியல் தரகர் நீரா ராடியாவும், ராசாவும் பேசிய தொலைபேசி உரையாடல் மூலம் 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆதாயம் பெற்றார் என்பது தெரியவந்துள்ளது என்பதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. கோரியது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் துவிவேதி கூறுகையில், 

பா.ஜ.க.வின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. அதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. ஆனால் ஆதாரம் ஏதும் இருக்குமானால் பா.ஜ.க அதனை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் அளிக்க வேண்டும் என்றார். முன்னதாக இந்த ஊழல் விவகாரத்தில் தனக்கு ஆதாயம் எதுவும் இல்லையென ப. சிதம்பரம் விளக்கமளித்திருந்தார். ஆனால் அந்த விளக்கமானது தனக்கு தானே அவர் வழங்கி கொண்ட நற்சான்று என்று பா.ஜ.க. ஏற்க மறுத்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்