முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்பாபாவின் அறையில் ரூ.11 கோடி-98 கிலோ தங்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

புட்டபர்த்தி, ஜூன்.19 -  ஆன்மீக குரு ஸ்ரீ சத்திய சாய்பாபாவின் அறையில் ரூ.11கோடி ரொக்கப்பணமும் 98 கிலோ தங்கமும் இருந்தது.கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி சாய்பாபா முக்தி அடைந்த பின் அவரது தனி அறையான யஜூர் வேத மந்திர் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. சத்ய சாய் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் சாய்பாபாவின் தனியறையை திறக்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள், முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியும், சத்யசாய்சேவா உறுப்பினருமான பி.என்.பி.பகவதி, அறக்கட்டளையின் செயலாளர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முன்னிலையில் தனியறை திறக்கப்பட்டது.மேலும் ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதி ஏ.பி.மிஸ்ரா, ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதா மற்றும் சாய்பாபாவின் உறவினரும் அறக்கட்டளை உறுப்பினருமான ஆர்.ஜே.ரத்னாகர் முன்னிலையில் சாய்பாபா தனியறையில் உள்ள பொருள்கல் குறித்த கணக்கெடுப்பு நடந்தது.

பொருள்களின் மதிப்பீடுகளை அளவிட வருமானவரித்துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் உடனிருந்தார். அந்த தனியறையில் ரூ.11.56 கோடியும், 98 கிலோ தங்கமும், 307 கிலோ வெள்ளியும் எடுக்கப்பட்டன. பணம் பிரசாந்தி நிலையத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சத்ய சாய் சேவா அறக்கட்டளையின் கணக்கில் முதலீடு செய்யப்பட்டதாக ரத்னாகர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்