முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி நலம்பெற வேண்டி 3 நாள் சிறப்பு ஹோமம் சத்யநாராயணா நடத்துகிறார்

திங்கட்கிழமை, 20 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

பெங்களூர், ஜூன் - 21 - நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற வேண்டி அவரது அண்ணன் சத்யநாராயணா மற்றும் அவரது குடும்பத்தினர் பெங்களூரில் 3 நாட்கள் சிறப்பு ஹோமம் நடத்துகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் அவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆனார். இருந்தாலும் சிங்கப்பூரிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அவருடன் அவரது குடும்பத்தாரும் உள்ளனர். ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் விரைவில் ராணா பட ஷூட்டிங்கில் கலந்துகொள்வேன் என்றும், தான் இவ்வளவு விரைவில் குணமானதற்கு தனது ஏராளமான ரசிகர்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனையே காரணம் என்றும் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த்தின் அண்ணன் சத்யநாராயணராவ், ரஜினி பூரணமாக நலம்பெற்று இந்தியா திரும்ப வேண்டும் என்று வேண்டி  பெங்களூர் கோவிபுரத்தில் உள்ள பவானி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் நேற்று நடத்தினார்.  நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு பூஜை தொடர்ங்கியது. கோ பூஜை, கணஹோமம் சஹாதானா ஹோமம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடந்தது. இந்த ஹோமம் முடிந்த பிறகு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த பூஜை இன்றுடன் முடிவடைகிறது.
இதுபற்றி சத்யநாராயணா கூறுகையில், ரஜினி பூரணமாக உடல்நலம் பெற்று நாடு திரும்ப வேண்டும் என்று வேண்டியே இந்த ஹோமம் நடத்தப்பட்டது என்றார். ரஜினி மிக விரைவில் குணமாக ராணா படத்தில் நடிப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்