எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.27 - ரூ.250 கோடி செலவில் சென்னை வர்த்தக மையம் விரிவாக்கப்பணிகள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்திய அரசின் இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் கூட்டு முயற்சியால் சென்னை வர்த்தக மையம் 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் 51 சதவீதமும் மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் 49 சதவீதமும் பங்களிப்பு செய்து இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்திய வர்த்தகம் மற்றும்
தொழில்துறை உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளும் வகையில், தொழில் கண்காட்சிகளை நடத்தி அதன் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.
சென்னை வர்த்தக மையம், சென்னை மாநகரின் பிரதான இடமான
நந்தம்பாக்கத்தில், 25.48 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. இவ்வர்த்தக மையம், 10560 சதுரடியில் மூன்று குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கண்காட்சி அரங்கங்களையும், ரூபாய் 60 கோடியே 60 இலட்சம் செலவில், 2000 பேர் அமரக் கூடிய கூட்டரங்கையும் உள்ளடக்கியது. சென்னை வர்த்தக மையத்தில், 2001ஆம் ஆண்டில் ஒரு கண்காட்சி மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், 2010ஆம் ஆண்டில் வருடம் முழுவதும் தொடர்ச்சியாக 84 கண்காட்சிகளையும், 107 கூட்டங்களையும் நடத்துமளவிற்கு தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இப்போதுள்ள வர்த்தக மையத்தின் பரப்பளவு, நாட்டிலுள்ள பிற வர்த்தக மையங்களின் பரப்பளவைவிட குறைவாக உள்ளதால், உலகளாவிய மிகப் பெரிய
வர்த்தகம் மற்றும் தொழில் கண்காட்சிகளை சென்னையில் நடத்த போதிய இடவசதியில்லை.
சென்னை வர்த்தக மைய விரிவாக்கத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2010 மே 3 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழில்துறை மானியக் கோரிக்கையின் போது சென்னை வர்த்தக மைய விரிவாக்க திட்டத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.
அதன் அடிப்படையில், தொழில்துறை வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும்
வகையில், சென்னை வர்த்தக மையம் உலகத்தரத்தில் விரிவாக்கப்படவுள்ளது. மேற்படி விரிவாக்கப் பணிக்கு, டாமாசிக் இன்ஜினியரிங் கன்சார்டியம் நிறுவனம் சென்னை, கட்டுமானப் பொறியியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளனர். ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில், பல அடுக்கு கண்காட்சி
அரங்குகள் மற்றும் இரண்டு அடுக்கு அடித்தளங்கள் கொண்ட வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.
மேற்படி விரிவாக்கத்தின் மூலம், தரைத்தளம் மற்றும் முதல் தளங்களில் தலா 6 குளிர்சாதனப் வசதிக் கொண்ட கண்காட்சி அரங்குகள் ஒவ்வொன்றும் 66000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளன. அடித்தளத்தில் 74000 சதுரடி பரப்பளவில், 2000 கார்களும், 2000 இரு சக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு
கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விரிவாக்கத்தில், உணவுக்கூடம், நூலகம், கூட்டரங்கம், பேரழிவு மேலாண்மை முறை மற்றும் இதர வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. இவ்விரிவாக்கத் திட்டம் ஜூலை 2011ல் தொடங்கப்பட்டு, மார்ச் 2013ல் முடிவடையும். இவ்விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்றப்பின்,
நாட்டிலேயே சிறந்த தொழிற்கண்காட்சி வளாகமாக சென்னை வர்த்தக மையம் அமையும்.
சென்னை வர்த்தக மையத்தின் விரிவாக்கத் திட்டத்தினை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.2.2011) தொடங்கி வைத்து, அதன் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, தொழில்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் தலைவர் தேவேந்திரநாத் சாராங்கி, மேலாண்மை இயக்குநர் சுனில் பாலிவால், தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ். கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.