முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 வரை உயர்கிறது...!

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.24 - டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய், ஆகியவற்றின் விலைகள் அடுத்த மாதம் உயர்த்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு, சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 35 ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 ம், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 3 ம் உயர்த்தப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து வந்த மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் கடந்த ஓராண்டாக டீசல், கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு உயர்த்தவில்லை. அதே நேரத்தில் பெட்ரோல் விலையை மத்திய அரசு 10 தடவைக்கும் மேலாக உயர்த்தியுள்ளது. 

இந்தியன் ஆயில் கார்பரேசன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை மட்டுமே தாங்களே நிர்ணயித்துக் கொள்ள உரிமை பெற்றுள்ளதால் டீசல், கேஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை விஷயத்தில் மத்திய அரசின் முடிவையே எதிர்பார்த்துள்ளன. தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரிக்கட்ட டீசல், மண்ணெண்ணெய், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதால் கடந்த மாதமே இதன் விலைகளை மத்திய அரசு உயர்த்தவிருந்தது. 

இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்களின் கடன் அளவு ரூ. 1.20 லட்சம் கோடியை எட்டி விட்டதால் இந்த நிறுவனங்களை நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பிரதமர் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி ஆகியோர் நடத்திய ஆலோசனை கூட்டத்தை அடுத்து கேஸ் சிலிண்டர் விலை ரூ. 25 முதல் ரூ. 50 வரையும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1 முதல் ரூ. 6 வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே நேரம் மண்ணெண்ணெய் விலை குறைவாக உயர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வை அமலாக்கும் அதே நேரத்தில் இலவச இணைப்பாக பெட்ரோல் விலையையும் ரூ. 2 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்