முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்கிறார் கனிமொழி

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,ஜூன்.24 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் உள்ள தி.மு.க எம்.பி. கனிமொழி அங்கு மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்வதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான 6 ம் எண் பிரிவில் மெழுகுவர்த்தி தயாரிப்பு பணி நடைபெறுகிறது. சிறையில் உள்ள கைதிகளுக்கு வெளியுலக தொடர்பு ஏற்படவும், தொழில் பயிற்சி பெறவும் இந்த தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்தி சிறையில் உள்ள விற்பனை மையத்தின் மூலம் விற்கப்படுகிறது. இந்த தயாரிப்பு மையத்தில்தான் சக கைதிகளிடம் இருந்து மெழுகுவர்த்தி செய்ய கனிமொழி கற்று வருவதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் ஓய்வு நேரத்தில் படிப்பதிலும் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இருமுறை ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட போதும் அது பற்றி அவர் கவலை கொள்ளவில்லை என்றும் அனைவருடனும் இயல்பாக பழகியதாகவும் சிறை துறையினர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்