முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 7ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூன்.24 - வருகிற ஜூன் 7 ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். இது குறித்து வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் வெங்கடாசலம் கூறியதாவது, வங்கிகள் பணியாளர்கள் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வங்கிகள் இணைப்பு திட்டத்தை கைவிட வேண்டும். ஊழியர் பணியில் இருக்கும் போது இறந்தால் வாரிசுதாரருக்கு வங்கி பணி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 7 ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் உள்ளிட்ட அயல்நாட்டு வங்கிகளை சேர்ந்த கடைநிலை ஊழியர்கள், அதிகாரிகள், கிளை மேலாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்