முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானை தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு உதவி

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.24 - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், உனிசேநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பா என்பவரின் மகன் நாராயணப்பா 19.6.11 அன்று காட்டு யானை தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.

நாராயணப்பாவை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்