முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3ம் தேதி நடக்கிறது கார்த்தி - ரஞ்சனி திருமணம்

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூன்.24 - நடிகர் கார்த்தி திருமணம் வருகிற 3 ம் தேதி கோவையில் உள்ள கொடீசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. கார்த்தி, ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஈரோட்டில் உள்ள மணமகள் வீட்டில் நடந்தது. திருமண ஏற்பாடுகளில் கார்த்தி குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மணமக்களுக்கான நகை, ஆடைகளை கார்த்தியின் அண்ணி ஜோதிகா தேர்வு செய்துள்ளார். நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இனிப்பு, உலர்ந்த பழ வகைகளை வைத்து அழைப்பிதழ் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் முறைப்படி மஞ்சள் பத்திரிக்கையில் மணமக்கள் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன. அத்துடன் சென்னையில் உள்ள பிரபல ஸ்வீட்ஸ் கடையில் தயாரிக்கப்பட்ட இனிப்பையும் இணைத்து முக்கியஸ்தர்களின் வீடுகளுக்கு சென்று விநியோகித்து வருகிறார்கள். கார்த்தியின் தாய் லெட்சுமி, சகோதரி பிருந்தா ஆகியோரும் கார்த்தியின் அண்ணி ஜோதிகாவும் பிரபல ஜவுளிக் கடைகளில் புடவைகளை தேர்வு செய்துள்ளார்கள். காஞ்சிபுரத்திலும் பட்டுப்புடவைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் வரும் 7 ம் தேதி மாலை 7 மணியளவில் நடைபெறுகிறது. இதில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்