முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசில் சேரும் திட்டமா? கோபிநாத் முண்டே மறுப்பு

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,ஜூன்.- 25 - காங்கிரஸ் கட்சியில் சேரும் திட்டம் எதுவும் இல்லை என்று மக்களைவையின் பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவரான கோபிநாத் முண்டே தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிரா மாநில பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோபிநாத் முண்டேவுக்கும் கட்சியின் தலைவர் கட்காரிக்கும் இடையே மகாராஷ்டிரா மாநில கட்சி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து முண்டே பாரதிய ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேரவிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதற்கு ஏற்றார்போல் சில முக்கிய கூட்டங்களையும் முண்டே புறக்கணித்துவந்தார்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து நேற்று மும்பை திரும்பிய அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய அவர், தாம் பாரதிய ஜனதாவில் தொடர்ந்து நீடிப்பதாகவும் காங்கிரசில் சேரும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. அதுபோல் நானும் அந்த கட்சியுடன் தொடர்பு கொள்ளவில்லை. எனவே அக்கட்சியில் சேரும் பேச்சுக்கே இடமில்லை என்றும் முண்டே அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்