முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானைதாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம்- ஜெயலலிதா உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.-26 - கோவை மாவட்டத்தில் யானைதாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோயம்புத்தூர் மாவட்டம், கோவை தெற்கு வட்டம், ஆலாந்துறை கிராமம், மூங்கில்மடை என்ற இடத்தில் கருப்பன் என்பவரின் மகன் ராமன் 23.6.11 அன்று காட்டு யானை தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன். ராமன் என்பவரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினற்கு வனத்துறை மூலம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்