முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை உயர்வு ம.தி.மு.க. சார்பில் 28-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் வைகோ அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 26 - டீசல் விலை உயர்வுக்கு ம.தி.மு.க. சார்பில் 28-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏழை நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை முற்றிலும் சீர்குலைக்கச் செய்திடும் வகையில் மக்கள் விரோத மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு விலையை ரூ.50; டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3; மண்எண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 என்ற விகிதத்தில் உயர்த்தி உள்ளது.
இது தாங்கமுடியாத விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி நிற்கும் அடித்தட்டு, நடுத்தர மக்களின் தலையில் பாராங்கல்லைத் தூக்கிப்போடுவதுபோல் இந்த விலை ஏற்றம் அமைந்துள்ளது. இந்த விலையேற்றம் எண்ணெய் நிறுவனங்கள் மக்களை சுரண்டிக் கொள்ளையடிப்பதற்கான அநியாய ஏற்பாடாகும். இந்த விலையேற்றத்திற்கு கடுமையான
கண்டனத்தை தெரிவிப்பதோடு, விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில்  வரும் 28.6.2011 செவ்வாய் பிற்பகல் 3 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நானும், அவைத் தலைவர்  சு.துரைசாமி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோரும்,  பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி விழுப்புரத்திலும், துணைப் பொதுச்செயலாளர் நாசரேத் துரை அவர்கள் நாகர்கோவிலிலும், துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் தஞ்சாவூரிலும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கின்றோம்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்