முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேஸ் விலை உயர்வு மனிதாபிமானமற்ற செயல் பா.ஜ.க. கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.- 26 - டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது மனிதாபிமானமற்ற செயலாகும் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் இது குறித்து கூறும் போது, கடந்த ஓராண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலை 10 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.  உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்தாமல் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியது மனிதாபிமானற்ற செயலாகும். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு துணிவிருந்தால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்றார். 

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி முடிவு செய்துள்ளதாக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் தெரிவித்தார். இந்த விலை உயர்வு மக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கும். ஏற்கனவே இநத பொருட்களின் விலை மிக அதிகமாக உள்ளது. மேலும் சமீபத்தில்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டது. விலை உயர்வு குறித்து மத்திய அரசு பல முறை நன்றாக சிந்திக்க வேண்டும் என்றார் மம்தா பானர்ஜி.  

இந்த விலையேற்றத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதனை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் எச்சூரி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்