முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மோதல்

புதன்கிழமை, 29 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஹாங்காங், ஜூன். 29 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு - 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரில் மட்டுமே 5 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுகிறது. மற்ற நாடுகளுக்கு இடையே அதிகபட்சமாக 3 போட்டிகளைக் கொ ண்ட தொடர்களாக நடத்தப்பட்டு வருகிறது. 

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த முடிவு செய்யப் பட்டு உள்ளது. இது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. 

இந்திய அணி வரும் 2014 -ம் ஆண்டிலும், 2015 -ம் ஆண்டிலும் இங்கி லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அப்போது இரு அணிகளுக்கு இடையே 20 ஓவர் போட்டி, ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடக்க இருக்கிறது. 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை அதிகாரிகள் கமிட்டி கூட்டம், ஹாங்காங்கில் நேற்று முன் தினம் நடந்தது. இந்த கூட்டத்தில், ஆஷஸ் தொடர் தவிர, பிற தொடர்களிலும் 5 டெஸ்ட் போட்டிகளை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. 

அதன்படி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர் 5 போட்டிகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு கிரிக்கெட் போர்டும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்