முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒவியக் கலைக்காட்சிகள் நடத்த நிதி உதவி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - ஒவியக் கண்காட்சி நடத்த கலைக்கல்லூரி நிதி உதவி வழங்கப்படும் என்று கலை பண்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக அத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

தமிழக அரசின் சார்பில் கலை பண்பாட்டுத் துறையின் மூலம் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு தமிழ் நாட்டிலுள்ள ஓவிய சிற்ப கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப்படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியினை தனியாக தனிநபர் கண்காட்சியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டாக கூட்டுக் கண்காட்சியாகவோ நடத்த அரசின் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தகுதிவாய்ந்த ஓவிய சிற்பக்கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு கொண்டவர்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

கலைப் பண்பாட்டுத்துறை  ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச் செம்மல் விருது பெற்றவர்கள், கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி நடத்த விரும்புபவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்கள் மற்றும் இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தோர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தேவையில்லை. ஏனைய விண்ணப்பதாரர்கள் அவரவர்களுடைய சுய குறிப்பு (ஆடுச்​க்ஷஹசிஹ) சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் (5 எண்ணிக்கைகள்), அவரவர்கள் படைப்புத் திறன் பற்றிய செய்தித்

தொகுப்புகளின் ஒளி நகல்கள் ஆகியவைகளை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 15.7.2011 க்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்