முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசாவின் சகோதரரிடம் வருமான வரித்துறை விசாரணை

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

திருச்சி, ஜூலை 1 - ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் சகோதரர் மற்றும் அவரது சகோதரியின் கணவர் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.  2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தி.மு.க. மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் சகோதரர் கலியபெருமாள், ராசாவின் சகோதரி கணவர் ரங்கராஜ் ஆகியோர் திருச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை ஆஜராகினர். அவர்களிடம் வருமான வரித்துறையின் துணை இயக்குனர் ஆல்பர்ட் மனோகரன் விசாரணை நடத்தினார். இவர் 2 ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான விசாரணை அதிகாரிகளில் ஒருவர் என்று கூறப்படுகிறது. கடந்த 24 ம் தேதி இதே அலுவலகத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, சகோதரர் ராமச்சந்திரன், சகோதரி மகள் ப்ரீத்தி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்