எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை 2 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக்பாட்சாவின் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்த அதாவது சாதிக்பாட்சா எந்தச் சூழ்நிலையில் மரணமடைந்தார் என்பது குறித்து விசாரிக்க டெல்லியில் இருந்து மருத்துவர்கள் குழு ஒன்று சென்னைக்கு வருகிறது. டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த(எய்ம்ஸ்) டாக்டர்கள் குழு ஒன்று சென்னைக்கு விரைவில் வருகிறது. இந்த குழுவினரை மத்திய புலனாய்வுத் துறை அனுப்பிவைக்கிறது. சாதிக்பாட்சாவின் சாவில் மர்மம் இருப்பதாக சி.பி.ஐ. கண்டறிந்ததை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறையின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி லஞ்சப்பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழியும் கைது செய்யப்பட்டு அதே திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான 38 வயதான சாதிக்பாட்சாவிடமும் துருவித் துருவி விசாரணை நடத்தியது. இந்த விசாரணையைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்ரூவராக மாற சாதிக்பாட்சா திட்டமிட்டிருந்தாராம். அதைத் தொடர்ந்து டெல்லி செல்லவும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த அதேநாளில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கடந்த மார்ச் 16 ம் தேதி சாதிக்பாட்சா மர்மமான முறையில் இறந்துகிடந்தார். சாதிக்பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி தெரிவித்தார். சி.பி.ஐ. விசாரணையின் நெருக்கடி தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. ஆனால் சாதிக்பாட்சா தற்கொலை செய்துகொள்ளவில்லை, அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பின்னாளில் எழுந்தது. அதற்கு சில காரணங்களும் கூறப்பட்டன. கொல்லப்பட்டதாக கருதப்படும் சாதிக்பாட்சா முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து லஞ்ச விவரங்கள் தொடர்பான அனைத்து ரகசியங்களையும் அறிந்தவர் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, முன்னாள் அமைச்சர் ராசாவுக்கும் மற்றும் பலருக்கும் லஞ்சம் கொடுத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றியும் அவருக்கு தெரியுமாம். எனவே இவர் அப்ரூவராக மாறிவிட்டால் அனைத்து விஷயங்களும் அம்பலமாகிவிடும். பிறகு கம்பி எண்ண வேண்டிவரும் என்பதை உணர்ந்து அவரை கொலை செய்திருக்கலாம் என்று சி.பி.ஐ. சந்தேகிக்கிறது. மேலும் சாதிக்பாட்சா மரணமடைந்த காலகட்டமும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை உச்சகட்டத்தில் இருந்த நேரம் அது. அந்த காலகட்டத்தில்தான் சாதிக்பாட்சா இறந்திருக்கிறார். மேலும் அப்ரூவராக மாறவும் அவர் திட்டமிட்ட நேரமும் அதுதான். அதற்காக டெல்லி புறப்பட்ட நாளன்றுதான் அவர் மரணமும் அடைந்திருக்கிறார். மேலும் அவர் இறந்து 7 மணி நேரம் கழித்தபிறகுதான் தற்கொலை கடிதம் என்ற ஒன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் ராசாவும் அவரது மனைவியும் நல்லவர்கள் என்று சர்ட்டிபிகேட் வேறு தரப்பட்டுள்ளதாம். 7 மணி நேரம் கழித்து கைப்பற்றப்பட்ட இந்த கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதால் சி.பி.ஐ.யின் சந்தேகம் வலுத்துள்ளது. எனவே சாதிக்பாட்சா கொல்லப்பட்டிருக்கலாம் என்று சி.பி.ஐ. கருதுகிறது. அதற்கான ஆதாரங்களும் அதற்கு கிடைத்துள்ளன. அதனால்தான் சாதிக்பாட்சாவின் மர்மச் சாவு குறித்து விசாரிக்க அதாவது எந்த சூழலில் அவர் இறந்தார் என்பது குறித்து விசாரிக்க டெல்லியில் இருந்து டாக்டர்கள் குழுவை அனுப்ப சி.பி.ஐ. முடிவு செய்துவிட்டது.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் குழு ஒன்று இதற்காக வெகு விரைவில் சென்னைக்கு வருகிறது. இந்த குழுவினர் சாதிக்பாட்சா உடல் புதைக்கப்பட்ட கல்லறையை தோண்டி அவரது உடலை எடுத்து உடலின் பல்வேறு பாகங்களில் பலவிதமான சோதனைகளை நடத்த உள்ளனர் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாதிக்பாட்சாவின் மர்மச் சாவு குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174 வது பிரிவின் கீழ் ஏற்கனவே மத்திய புலனாய்வுத் துறை தனது விசாரணையை துவக்கிவிட்டது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.
முன்னதாக சாதிக்பாட்சா மரணமடைந்தபோது தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் பலவிதமான சந்தேகங்களை எழுப்பின. சாதிக்பாட்சாவின் சாவில் மர்மம் உள்ளது என்று அப்போதைய எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதை அடுத்து அப்போதிருந்த மாநில அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடிவு செய்தது. அதன்படி இந்த வழக்கு விசாரணை நடந்துவருகிறது. மரணமடைந்த சாதிக்பாட்சா ஒரு தொழிலதிபர் மட்டுமின்றி முன்னாள் அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரும் கூட. இவருக்கு சென்னையிலும், பெரம்பலூர் போன்ற இடங்களிலும் பல நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இவரது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பலவிதமான அதிரடி சோதனைகளை நடத்தினார்கள். அதன்பிறகுதான் அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அந்த காலக்கட்த்தில்தான் சாதிக்பாட்சா மரணத்தை தழுவ நேர்ந்தது. இது கொலையா? அல்லது தற்கொலையா ? என்பது டெல்லியில் இருந்து டாக்டர்கள் குழு வந்தபிறகு அனைத்து விவரங்களும் வெளிச்சத்துக்கு வரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.