முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கற்பழிப்பு வழக்கில் எம்.எல்.ஏ.வின் உதவியாளரும் கைது

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

நாசிக், பிப். 28 - கற்பழிப்பு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல். ஏ. திலீப் வாக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதே வழக்கில் அவரது உதவியாளர் மகேஷ் என்கிற புன்டி மாலியை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் பதார்தி என்ற இடத்தில் 20 வயது இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித்தருவதாக தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. திலீப் வாக்கும் அவரது உதவியாளர் மகேஷ் மாலியும் உறுதி அளித்தனர். இதை நம்பி அந்த பெண் நாசிக்கிற்கு அவர்களை பார்க்க சென்றார். கடந்த 21 ம் தேதி அந்த பெண்ணை நாசிக்கில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து திலீப் வாக்கும் அவரது உதவியாளர் மாலியும் கற்பழித்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக அந்தபெண் அவர்கள் இருவர் மீதும் கடந்த 25 ம் தேதி போலீசில் புகார்  செய்தாள். தான் முதலில் அவுரங்காபாத்தில் அந்த எம்.எல்.ஏ.வை சந்தித்தாகவும் அவர் தனக்கு வேலை வாங்கித்தருவதாக உறுதி அளித்தார் என்றும் ஆனால் தன்னை ஏமாற்றி தன்னை கற்பழித்துவிட்டனர் என்று அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

இதை அடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அந்த எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். நேற்று அவரது அந்தரங்க உதவியாளர்மகேஷ் மாலியையும் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட திலீப் வாக் தனக்கு உடல் நிலை சரியில்லை என்ற கூறியதை அடுத்து நாசிக்கில் உள்ள அரசு மருத்துவ மனை ஒன்றில் அவரை போலீசார் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில் எம்.எல்.ஏ.திலீப் வாக்கை  தேசியவாத காங்கிரஸ் மேலிடம் கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்