முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் ஆட்டோ டிரைவர் ஓட-ஓட விரட்டி கொலை

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.2 - மதுரையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஓட,ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்தவர் ஜோதிலிங்கம்(37) ஆட்டோ ஓட்டிவந்தார். இவருக்கு திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளனர். வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நாகராஜ். சம்பவத்தன்று இரவு ஆட்டோ வேண்டும் எனக்கேட்டு அழைத்து சென்றார். இருவரும் ஆட்டோவில் பழைய டயர்களை ஏற்றிக்கொண்டு அதை தீவைத்து எரிப்பதற்காக அவனியாபுரம் அருகே உள்ள முத்துப்பட்டிக்கு சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாளுடன் வந்து ஜோதிலிங்கத்தை வெட்ட முயன்றனர். இதை வியாபாரி நாகராஜ் தடுத்தார். இதில் நாகராஜுக்கும் வெட்டு விழுந்தது. வெட்டு காயத்துடன் நாகராஜ் ஓட்டம்பிடித்தார். அந்த கும்பல் ஜோதிலிங்கத்தை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த ஜோதிலிங்கம் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

   இது குறித்து நாகராஜ் அவனியாபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து பார்த்த போது ஜோதிலிங்கம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி மருத்துவபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்