முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் அ.தி.மு.க.வினர் அன்னதானம்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,பிப்.28 - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 63-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் அ.தி.மு.க. வினர் தொடர்ந்து அன்னதானம் வழங்கினர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 63-வது பிறந்த நாளை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி மாவட்ட கழக செயலாளர் செல்லூர் கே.ராஜூ ஏற்பாட்டின் பேரில் கொண்டாடி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு 3-ம் பகுதி 53-வது வட்ட அ.தி.மு.க. சார்பில் அனுப்பானடி பஸ்நிலையம் அருகே 2 ஆயிரத்து 63 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

 இதனை வட்ட பிரதிநிதி ஆர்.பிச்சை தலைமையில் மாவட்ட பொறுப்பாளரும் மாநில மாணவரணி செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் அன்னதானம் வழங்கி துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் செல்லூர் கே.ராஜூ, முன்னாள் செயலாளர் வி.ஆர்.ராஜாங்கம், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ். முத்துராமலிங்கம், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் வி.கே.சாமி 53-வது வட்டக்கழக செயலாளர் எம்.ஜி.ஆர். நாகராஜன்,  மற்றும் துளசி, கருப்புசாமி, குட்டை ராசு, முருகன், முத்துசாமி, கோவிந்தராஜ், பி.பார்த்தீபன்,வடை நாகராஜ், கொத்தனார் மைக்கான், பி.ராஜா, மன்னா பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

மதுரை வடக்கு 1-ம் பகுதி அ.தி.மு.க. சார்பில் ஜவஹர்புரம் முனியாண்டி கோயில் முன்பாக நடைபெற்ற ஜெயலலிதாவின் 63-வது பிறந்த நாள் விழாவையொட்டி பகுதி கழக செயலாளர் கே.ஜெயவேல் ஏற்பாட்டில் ஏழை எளியோருக்கு மாநில மாணவரணி செயலாளர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானம் வழங்கினார். இதனைத்தொடர்ந்து மதுரை வடக்கு 2-ம் பகுதி 4-வது வட்ட அ.தி.மு.க. சார்பில் சம்பக்குளத்தில் உள்ள ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை வட்டக்கழக செயலாளர் புதூர் கே.எம்.கண்ணன் தலைமையில் பகுதி கழக செயலாளர் எம்.என். முருகன் முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.பி.உதயகுமார் அன்னதானம் வழங்கி துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து,  அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி,முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஆர்.ராஜாங்கம், எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷ.ராஜலிங்கம், மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.முத்துராமலிங்கம்,வட்ட செயலாளர்கள் கார்த்திக் முனியசாமி, எ.முத்துசாமி, எஸ்.போஸ், கே.முத்துசாமி, எம். ஆறுமுகம், டி.ராமன், மானகிரி மூர்த்தி மாவட்ட பேரவை துணைத்தலைவர் அபுதாகீர், புதூர் சுந்தரா, கெளசல்யா, டி.ஜெயபாக்கியம், எம்.ஆல்வார், சம்பக்குளம் எஸ். அசோகன், எம்.ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்