முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடு அபகரிப்பு வழக்கில் திமுக கோட்டத்தலைவர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி,ஜூலை.3 - திருச்சியில் வீடு, மனை அபகரிப்பு தொடர்பான புகாரில் தி.மு.க கோட்ட தலைவர் நேற்று கைது செய்யப்பட்டார். திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் கமலா(45). இவர் தனக்கு உறையூர் நாச்சியார்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டை அப்பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகரும் கோட்ட தலைவருமான அறிவுடைநம்பி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார். அவர் மாதாமாதம்  வாடகை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். கமலா பலமுறை சென்று வாடகை பாக்கியை கேட்டுள்ளார். தொடர்ந்து பல மாதங்களாக வாடகை கொடுக்காததால் வீட்டை காலிசெய்யும்படி கமலா கூறியுள்ளார். ஆனால் அதற்கு அறிவுடைநம்பி கொலை மிரட்டல் விடுத்ததாக சில தினங்களுக்கு முன் மாநகர கமிஷ்னர் மாசானமுத்துவிடம் இது தொடர்பாக புகார் மனு கொடுத்திருந்தார். 

இதுபோல் திருச்சி உறையூர் வண்டிக்கார தெருவைச் சேர்ந்த காமராஜ் என்பவரும் நில ஆக்கிரமிப்பு சம்மந்தமாக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பிரிவு போலிசில் புகார் கொடுத்தார். அதில் தனக்கு சொந்தமாக உறையூர் பகுதியில் ஒரு காலி மனை உள்ளது. அதனருகில் குடியிருந்து வரும் மாநகராட்சி கோட்டதலைவர் அறிவுடை நம்பி அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு காலி செய்ய மறுப்பதாகவும் இது குறித்து கேட்டால் தன்னை மிரட்டுகிறார் என்றும் அவர்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தனது மனையை மீட்டு தருமாறும் அந்த புகாரில் கூறியிருந்தார்.  

இந்நிலையில் மேற்கண்ட 2 புகார்களின் அடிப்படையில் தி.மு.க பிரமுகரும் கோட்டதலைவருமான அறிவுடைநம்பியை நேற்று காலை உறையூர் போலிசார் கைது செய்தனர்.  இச்சம்பவத்தினால் தி.மு.கவினர் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்