முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கார்த்தி -ரஞ்சனி திருமணம் திரை உலக பிரமுகர்கள் நேரில் வாழ்த்து

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

கோவை,ஜூலை.- 4 - நடிகர் கார்த்தி -ரஞ்சனி திருமணம் கோவையில் நேற்று காலை நடந்தது. திரையுலகினர் நேரில் வாழ்த்தினர். நடிகர் சிவகுமார் -லட்சுமி தம்பதியின் இளையமகன் நடிகர் கார்த்தி, ஈரோடு மாவட்டம் குமாரசாமி கவுண்டன் பாளையத்தை சேர்ந்த சின்னுசாமி -ஜோதிமீனாட்சி மகள் ரஞ்சனி திருமணம் கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று காலை நடந்தது. கொடிசியா அரங்கம் மற்றும் திருமண மேடை வண்ண பூக்களாலும் மின்விளக்குகளாலும் ஜொலித்தது. ஆர்ட் டைரக்டர் சந்திரசேகர் பிரமாண்ட் அரங்கம் அமைத்திருந்தார்.
மணமேடையில் காலை 5.45 மணி முதல் சடங்குகள் நடந்தன. மணமகன் கார்த்தி பட்டுவேட்டி, சட்டை அணிந்திருந்தார். மணமகள் ரஞ்சனி தங்க நிறத்தில் பட்டுப்புடவை மற்றும் வைரநகைகள் அணிந்திருந்தார். பொற்றோருக்கு கார்த்தி பாதபூஜை செய்தார். காலை 6.35 மணிக்கு, சிவக்குமார் -லட்சுமி தம்பதியினர் மங்களநாண் எடுத்து கொடுக்க, மணமகள் ரஞ்சனிக்கு கார்த்தி தாலி கட்டினார். பின்னர் மணமக்கள் பெற்றோர் காலிலும், கார்த்தியின் அண்ணன் நடிகர் சூரியா, அண்ணி ஜோதிகா காலிலும் விழுந்து ஆசி பெற்றனர்.
திருமணம் முடிந்ததும், மேடையிலேயே திருமண பதிவு புத்தகத்தில் கார்த்தியும், ரஞ்சனியும் கையெழுத்திட்டனர். மணமக்களை நடிகர்கள் பிரபு, ராஜேஷ், நிழல்கள்ரவி, பாண்டியராஜன், சரவணன், நடிகைகள் ராதிகா, ஜீவிதா, நக்மா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, பாலா, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, இசை அமைப்பாளர் கணேஷ் உள்பட ஏராளமானோர் வாழ்த்தினர்.
மதியம் 12 மணிக்கு கார்த்தியின் ரசிகர்களுக்காக தனியாக விருந்து அளிக்கப்பட்டது. கார்த்தி ரசிகர் மன்றத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர். வரும் 7 -ம் தேதி மாலை, சென்னை லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் கார்த்தி -ரஞ்சனி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்