எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.- 4 - இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக பொருளாதார தடை ஏற்படுத்தும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க. இளஞைர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினர் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினர் ஜெயலலிதா அரசு நலத் திட்டங்களை துண்டு பிரசுரங்கள் மூலம் வீடு வீடாக வினியோகிக்கவேண்டியும், பாசறைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டியும் ஆலோசனைக் கூட்டம் நேற்று அ.தி.மு.க. தலைமை செயலகத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்ட நிகழ்சிகளுக்கு கழக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பாசறை இணை செயலாளர் ஆர்.ராஜலட்சுமி எம்.எல்.ஏ. வரவேற்றார். இதில் அ.தி.மு.க அவை தலைவர் இ. மதுசூதனன், கழக அமைப்பு செயலாளர்கள் சி. பொன்னையன், டாக்டர். விசாலாட்சி நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சுலோச்சனா சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றினார்கள் . மேலும் கழக அமைப்புச் சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர்கள் ஆர். கமலக்கண்ணன், டாக்டர்.கே.எஸ்.சதீஸ்குமார் ஆகியோர் நன்றி தெரிவித்தார்கள்.
இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் எண். 1
தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு, அமோக வெற்றிப் பெற்று மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கழக இளைஞர் மற்றும், இளம்பெண்கள் பாசறை வணங்குகிறது.
தீர்மானம் எண். 2
குடும்ப ஆட்சி, ஸ்பெக்ட்ரம் ஊழல், கூட்டுக் கொள்ளை அதிகார திமிர், ஆணவப் போக்கு என்று சர்வாதிகார வெறியோடு தமிழகத்தையும், மக்களையும் வஞ்சித்த வஞ்சகராம் கருணாநிதியையும், அவரது கும்பலையும் வேரடி மண்ணோடு சாய்த்து, தமிழகத்திற்கு கொடுங்கோலர் கருணாநிதி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று தந்ததோடு, தன்னலம் பாராது மக்கள் நலனை மட்டுமே மனதிலே ஏற்று மக்களுக்காக மக்கள் ஆட்சி நடத்திட, வள்ளலுக்கு எல்லாம் வள்ளலாக திகழும், வாழும் வள்ளல் முதல்வருக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை வணங்கி தெரிவித்துக்கொள்கிறது. தீர்மானம் எண். 3
தாலிக்கு தங்கம், பெண்களுக்கு திருமண உதவி, மாணவ சமுதாயத்தினருக்கு மடி கணினி, இலவச அரிசி என்று அனைத்து பிரிவு மக்களுக்கும் பயன்தரும் வண்ணம் தேனினும் இனிய திட்டங்கள் பல தந்து சிந்தை மகிழ நல்லாட்சி நல்கிடும், தங்கத்தாரகை, சுயநலம் பாராத சொக்கத் தங்கம், என அறிவித்த முதல்வருக்கு இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இந்த இனிய தருணத்தில் நன்றியுடன் வணங்குகிறது.
தீர்மானம் எண்.4
தமிழனத் தலைவனென்று, தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் தமிழின விரோதி கருணாநிதி ஆட்சி காலத்தில் உலகத் தமிழனிலிருந்து உள்ளூர் தமிழன் வரை கேட்க நாதியற்று லட்சக்கணக்கில் கொல்லப்பட்டப்போது வாய்மூடி மெளனியாக இருந்து உண்ணாவிரத நாடகம் நடத்தி உள்ளம் மகிழ்ந்த தன்னல வெறியார் கருணாநிதியை கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம் எண்.5
உலகில வாழும் பத்து கோடி தமிழர்களுக்கும் பாதுகாப்பு கவசமாகவும், பாசம் காட்டும் தாயாகவும் விளங்கிடும் முதல்வர் ஜெயலலிதா வல்லரசு நாடுகள் உட்பட, வளர்ந்து வரும் நாடுகள் வரை வாயார புகழும் வண்ணம் தமிழின விரோதி லட்சக்கணக்கில் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும். மேலும், இலங்கைக்கு எதிராக இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் அமோக ஆதரவோடு நிறைவேற்றியதோடு, துரோகி கருணாநிதியின் சுயநலத்திற்காக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட தமிழர்களின் சொந்த மண் கச்சத்தீவை தமிழகத்திற்கு திரும்ப பெற்று, தமிழக மீனவர்களை காப்பாற்றிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் போட்ட சிங்க நிகர் துணிவு கொண்ட முதல்வரை கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை நன்றியுடன் வணங்குகிறது.
தீர்மானம் எண்.6
தமிழக முதல்வரின் சீர்மிகு திட்டங்களையெல்லாம் துண்டு பிரசுரமாக அச்சிட்டு, கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை பள்ளி, கல்லூரிகளிலும், பட்டி தொட்டியெங்கும் இனிப்பு வழங்கி வீடு வீடாக விநியோகித்து சரித்திரம் போற்றும் திட்டங்கள் அனைவரும் அறியும் வண்ணம் பிரச்சாரம் செய்வதென்றும், அதே வேளையில் பாசறையில் புதிய உறுப்பினர்களை லட்சக்கணக்கில் சேர்ப்பதென்றும் கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை இந்த இனிய நேரத்தில் உறுதி ஏற்கிறது.
தீர்மானம் எண்.7
தி.மு.க., காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மத்திய அரசின் மக்களை வஞ்சிக்கும் செயலான பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணை விலை உயர்வை வன்மையாக கண்டிப்பதோடு, இந்த விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கா வண்ணம் தமிழக அரசின் வரி விதிப்பை nullக்கி மக்களுக்கு நேசக்கரம் nullட்டிய பாசத்தாயிக்கு கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை நன்றி தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.