முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் பாதையில் நிலச்சரிவு பக்தர்களின் யாத்திரை நிறுத்தம்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீநகர், ஜூலை - 4 - அமர்நாத்  கோவிலுக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால்  அமர்நாத் யாத்திரை  நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது. காஷ்மீரில் இமயமலைப்பகுதியில் 13 ஆயிரம் அடி உயரத்தில்  அமர்நாத் குகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள இயற்கை பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அந்த கோவிலுக்கு  செல்வது வழக்கம். இந்த ஆண்டும் இந்த  யாத்திரை கடந்த ஜூன் மாதம் 30 ம் தேதி  துவங்கப்பட்டது. இதுவரை  சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த கோவிலுக்கு யாத்திரை  சென்று பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அமர்நாத் செல்லும் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் தற்போது கனத்த மழை பெய்து வருகிறது. அதனால்  சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதன்  காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மண் மற்றும் பாறைகள் விழுந்து கிடக்கின்றன. இதனால் இந்த பாதையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பகல்ஹாம், பட்லா ஆகிய வழித்தடங்கள் மூலமாக அமர்நாத் யாத்திரை செல்வது நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது.
நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் சரி  செய்யப்பட்ட பிறகே அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலைகளில் தேங்கியுள்ள மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்