எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிட்ஜ்டவுன், ஜூலை - 4 - இந்தியா- மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இயற்கை ஒத்துழைக்காததால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது என்று இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி கவலை தெரிவித்தார். இந்தியா-மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி பார்படாஸின் பிரிட்ஜ்டவுன் நகரில் உள்ள கென்சிங்க்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 11 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் பொறுப்பாக விளையாடியதால் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. இதனால் 4 ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்தது.
வி.வி.எஸ்.லக்ஷ்மன் 72 ரன்களுடனும், விராட் கோஹ்லி 26 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆனால் விராட் கோஹ்லி ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே தனது விக்கெட்டை இழந்தார். கூடுதலாக ஒரு ரன்னை மட்டுமே சேர்த்த கோஹ்லி, எட்வர்ட்சின் பந்துவீச்சில் சம்மியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். இந்நிலையில் நன்கு விளையாடிவந்த லக்ஷ்மனும் 87 ரன்கள் எடுத்த நிலையில் எட்வர்ட்சின் பந்தில் சம்மியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 247 ஆக இருந்தது. தொடர்ந்து அணித் தலைவர் தோனி களமிறங்கினார். இவரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. தன் பங்கிற்கு 5 ரன்களை மட்டும் சேர்த்த தோனி, எட்வர்ட்சின் பந்தில் சந்தர்பாலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து வந்த ஹர்பஜன்சிங் அவுட்டாகாமல் 6 ரன்களையும், ரெய்னா ஆட்டமிழக்காமல் 12 ரன்களையும் எடுத்திருந்தநிலையில் இந்திய அணியின் டிக்ளேர் அறிவிப்பை மிகத் துணிச்சலாக செய்தார் தோனி. அப்போது, அணியின் எண்ணிக்கை 6 விக்கெட் இழப்பிற்கு 269 ஆக இருந்தது.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 83 ஓவர்களில் 281 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி வைத்தது. இதையடுத்து மேற்கு இந்திய தீவுகளின் இரண்டாவது இன்னிங்சை பரத்தும், சிம்மன்சும் துவக்கினர். முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா இந்த இன்னிங்சிலும் தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் சிம்மன்சின் விக்கெட்டை பறித்தார். சிம்மன்ஸ் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய சர்வானும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 8 ரன்களே எடுத்த நிலையில் குமாரின் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து டேரன் பிராவோ களமிறங்கினார். மே.இ. தீவுகள் அணி 55 ரன்கள் எடுத்த நிலையில் துவக்க வீரர் பரத்தை 27 ரன்களில் வெளியேற்றினார் இஷாந்த் சர்மா. அடுத்து சந்தர்பால் பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார். சந்தர்பால் ரன் எடுக்காவிட்டாலும் இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தார். இவர் அதிக பந்துகளை வீணாக்கினார். ஆனால் பிராவோ ஓரளவு அடித்து ஆடி ரன்களை சேர்த்தார். இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 109 ஆக இருந்தபோது சந்தர்பால் ஹர்பஜன்சிங் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். இவர் 87 பந்துகளை ஏப்பம் விட்டபிறகே இந்த 12 ரன்களை எடுத்தார். ஆனாலும் டி.வி. ரீப்ளேயில் சந்தர்பால் அவுட் இல்லை என்பது தெரியவந்தது. அடுத்து சாமுவேல்ஸ், பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார். சாமுவேல்ஸ் 9 ரன்கள் மட்டும் எடுத்து சர்மாவின் பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 53.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களாக இருந்தது. அடுத்து களமிறங்கிய மே.இ. தீவுகளின் விக்கெட் கீப்பர் பாவ் மற்றும் பிராவோ ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களை மிகவும் சோதித்தது. முன்னணி பந்துவீச்சாளர்கள் எவரும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இந்நிலையில் மழை வேறு குறுக்கிட்டது. அப்போது மேற்கு இந்திய தீவுகள் அணி 181 ரன்களை எடுத்திருந்தது. மழை நின்று ஆட்டம் தொடர்ந்தபோதும் மைதானத்தில் தண்ணீர் ஆங்காங்கே இருந்ததால் அதை துடைக்கும் பணியும் இடையில் நடந்தது. மீண்டும் ஆட்டம் துவங்கியதும் பிராவோ, பாவ் இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை 201 க்கு உயர்த்தினர். அப்போது அபிமன்யு மிதுன் பந்தில் தோனியால் கேட்ச் பிடிக்கப்பட்ட பிராவோ அவுட்டானார். இவர் எடுத்த ரன்கள் 73. இதையடுத்து வந்த சம்மி வந்தவுடன் இஷாந்த் பந்தில் அவுட்டானார். தொடர்ந்து ராம்பால் களமிறங்கினார். ஆனால் அப்போது போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி அம்பயர்கள் ஆட்டத்தை நிறுத்தினர். மேற்கு இந்திய தீவுகள் அணி 71.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை எடுத்திருந்தது. இதனால் போட்டி எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. இயற்கை இடையூறுகளினால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கைநழுவியது. மேலும் பிராவோ, பாவ், சந்தர்பால் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கும் இந்தியாவின் தொடர் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறித்தது. தொடரை சமன் செய்ய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போட்டி முடிவு குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் தோனி இயற்கை காரணங்களால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது என்றார். மேலும் இந்த ரன்களில் டிக்ளேர் செய்த முடிவு தவறான ஒன்று அல்ல என்றும் வெற்றி பெறுவதற்காக தான் வகுத்த வியூகம் இயற்கையால் தட்டிப் பறிக்கப்பட்டது என்றார்.
இதற்கிடையில் இந்திய அணியினர் ஓவர்களை தாமதமாக வீசியதால் தோனிக்கு அவரது சம்பளத்தில் 60 சதவீதமும், மற்ற வீரர்களின் சம்பளத்தில் 30 சதவீதமும் பிடித்தம் செய்யப்படும் என்று போட்டி நடுவர் அறிவித்துள்ளார்.
இந்தியா -மேற்கு இந்திய தீவுகள் இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி வருகிற 6 ம் தேதி துவங்குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.