முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா முன்னிலையில் கதர்துறை அமைச்சராக செந்தூர்பாண்டியன் பதவி ஏற்பு

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 5 - முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான  அமைச்சரவையில் கதர்துறை அமைச்சராக செந்தூர் பாண்டியன் நேற்று கவர்னர் மாளிகையில் பதவிஏற்றுக்கொண்டார். முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான  அமைச்சரவையில் நேற்று முன்தினம்  புதிய அமைச்சராக செந்தூர் பாண்டியன் சேர்கப்பட்டார். மேலும் 4 அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றப்பட்டது. அமைச்சரவையிலிருந்து  இசக்கி சுப்பையா விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட அமைச்சரின் பொறுப்புக்கள் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் செந்தமிழனுக்கு கூடுதலாக  கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. காதி மற்றும கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தூர் பாண்டியன் நேற்று பிற்பகல் கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் அமைச்சராக பதவிஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் சுர்ஜித் சிங்பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா, சடடசபை சபாநாயகர் டி.ஜெயக்குமார்,  அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம்,  கே.ஏ. செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முத்துசாமி , சி.வி. சண்முகம், செந்தில் பாலாஜி, கோகுல இந்திரா, செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், செல்வி ராமஜெயம், எஸ்.பி. சண்முகநாதன், அக்ரிகிருஷ்ணமூர்த்தி, புத்திசந்திரன், செந்தமிழன், கே.வி.ராமலிங்கம், என்.ஆர்.சிவபதி, செ.கருப்பசாமி, பி. தங்கமணி, கே.டி.பச்சைமால்,  உள்ளிட வர்களும்,  எல்.எம்.ஏ.க்கள் ராஜலட்சுமி, அசோக் மற்றும் தளவாய்சுந்தரம், சுலோசனா சம்பத் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்