முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படை சிறைபிடித்திருந்த தனுஷ்கோடி மீனவர்கள் 14 பேர் விடுவிப்பு

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம் ஜூலை - 5 - நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தனுஷ்கோடி மீனவர்கள் 14 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் சில மணி நேரம் கழித்து விடுதலை செய்தனர்.  தனுஷ்கோடியிலிருந்து நேற்று அதிகாலை முத்துக்கனி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் தர்மராஜ், கலைமணி, நூர்தீன், முருகதாஸ், ராஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி 5ம் பீடையை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 14 பேரையும், படகையும் காலை 11 மணிக்கு சிறைபிடித்துச் சென்றதாக கரை திரும்பிய மற்ற தனுஷ்கோடி மீனவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மீன்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சிறை பிடிக்கப்பட்ட நாட்டுப்படகில் இயந்தர கோளாறு இருந்ததாகவும் அதனை இலங்கை கடற்படையினர் சரிசெய்து விடுவிக்கப்பட்டதாக யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி மகாலிங்கம் கூறியதாக இந்தியா- இலங்கை நிருபராதி விடுதலைக்கான கூட்டமைப்பு பிரதிநிதி யு.அருளானந்தம் தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் சில மணி நேரங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தனுஷ்கோடி மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்