முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழம்பறித்த சிறுவன் இராணுவத்தால் சுட்டுக்கொலை!-வைகோ கடும் கண்டனம்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.- 5 - சென்னை தீவுத்திடல் பகுதியில் இராணுவ வளாகத்தில் பழம் பறிக்க சென்ற சிறுவன் தில்சனை இராணுவத்தினர்  சுட்டுக்கொன்றத்தற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டு வரலாற்றில், ஏன் இந்திய நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை நடைபெற்று இராத கொடூரச் சம்பவமாக, 12 வயதுச் சிறுவன் தில்சன், சென்னையில், இராணுவத்தினரால் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளான். பறவைகள் மரங்களில் பழங்களைக் கொத்துவதைப் போல, இராணுவ அதிகாரிகளின் குடியிருப்புப் பகுதியில் உள்ள மரங்களில், மாம்பழங்கள், வாதாம் கொட்டைகளை சிறுவர்கள் பறிப்பது வழக்கமாக நடைபெறுகின்ற ஒன்றாகும். அதனால், இராணுவ அதிகாரிகளின் குடியிருப்புக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடப் போவது இல்லை.

அப்படி மரம் ஏறிப் பழம் பறித்த சிறுவனை எச்சரிக்கை செடீநுயாமல், உச்சந்தலையைக் குறிபார்த்து இராணுவத்தினர் சுட்டுக் கொன்றது, ஈவு, இரக்கம் அற்ற அக்கிரமச் செயல் ஆகும். உயிரற்ற நிலையில் தொங்கிய சிறுவனை, இலை தழைகளைக் கொண்டு, இராணுவத்தினர் முதலில் மறைத்து உள்ளனர். இரத்தக்கறைகளைத் தண்ணீர் கொண்டு கழுவி உள்ளனர்.

இந்தத் தடய அழிப்பு வேலை, அங்கு உள்ள மேலதிகாரிகளுக்குத் தெரியாமல் நடந்து இருக்க

முடியாது. உடன் இருந்த சிறுவர்கள் தகவல் தெரிவித்ததன்பேரில், பெற்றோரும், உறவினர்களும்,

குடிசைவாடிந பகுதி மக்களும் திரண்டு சென்றபின்பே, உண்மை வெளியில் வந்து உள்ளது.

தற்போது, நடந்த சம்பவத்தையே அப்பட்டமாக மூடி மறைக்கின்ற வகையில், இராணுவத்தினர் துப்பாக்கியால் சுடவே இல்லை என்று ஒரு செய்தியைப் பரப்ப முயற்சித்து உள்ளனர்.

சின்னஞ்சிறு பையனை காட்டுமிராண்டித்தனமாகச் சுட்டுக் கொன்ற, இராணுவத்தைச் சேர்ந்த கொலையாளியை, இராணுவத்தின் உயர் அதிகாரிகள், உடனடியாக தமிழகக் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். 

கொலையாளியை உடனே கைது செய்து, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் அருமைப்புதல்வனை இழந்து துயரத்தில் துடிதுடிக்கும் பெற்றோருக்கு, ம.தி.மு.க. சார்பில், என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்