எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.- 6 - நிபுணர்கள் குழு தயாரித்த 597 பக்க சமச்சீர் கல்வி அறிக்கை ஜகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.இது நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்திட்டம் கடந்த ஆட்சியின் போது அறிமுகம் செய்யப்பட்டது. சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமானதாக இல்லை .எனவே இந்தாண்டு பழைய பாடமுறையே நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து ஜகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் 1 மற்றும் 6 ம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறையே தொடரவேண்டும் ,மற்ற வகுப்புக்களுக்கு சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்துவது குறித்து நிபுணர்கள் குழுவினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜகோர்ட் உத்தரவிட்டது. ஜகோர்ட் உத்தரவை நடமுறைப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக அரசின தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட கல்வி நிபுணர்கள் குழுவை தமிழக அரசு கடந்த மாதம் அமைத்தது.
இந்த குழு குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:-
தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறந்த எதிர்காலம் அமையப்பெற, தரமான மற்றும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 2010-ம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச்சட்டத்திற்கு எனது அரசால் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தினை எதிர்த்து, ஒருசிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த திருத்த சட்டத்திற்கு இடைக்காலத்தடை விதித்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் இந்த சிறப்பு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தனது 15.6.11 நாளிட்ட தீர்ப்பில், பாடத்திட்டத்தின் தரம் மற்றும் பாடநூல்களின் தரம் ஆகியன குறித்து ஆராய்வதற்கு, தலைமை செயலாளர் தலைமையில், இரு மாநில பிரதிநிதிகள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரு பிரதிநிதிகள், இரு கல்வியாளர்கள், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த குழு தனது அறிக்கையை 6.7.11-க்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க, கீழ்க்காணும் உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது:- தமிழக அரசின் தலைமை செயலாளர் - தலைவர், இரு மாநில பிரதிநிதிகள்: ஜி.பாலசுப்பிரமணியன் - முன்னால் இயக்குநர் (கல்வி), மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் - உறுப்பினர், விஜயலட்சுமி சீனிவாசன் - முன்னாள் முதல்வர் - லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை மற்றும் ஆலோசகர், சென்னை சேவா சதன் (உதவி பெறும் பள்ளி) தாம்பரம் - உறுப்பினர்,
இரு கல்வியாளர்கள்: சி.ஜெயதேவ் - நிறுவனர் மற்றும் செயலாளர், டி.ஏ.வி பள்ளி குழுமம், கோபாலபுரம், சென்னை - உறுப்பினர், ஒய்.ஜி.பார்த்தசாரதி - முதல்வர் மற்றும் இயக்குனர், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் குழுமம், சென்னை - உறுப்பினர், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரு பிரதிநிதிகள்: பேராசிரியர் பி.கே.திரிபாதி - அறிவியல் மற்றும் கணிதவியல் கல்வித்துறை, புதுடெல்லி - உறுப்பினர், பேராசிரியர் அனில் சேத்தி - சமூக அறிவியல் துறை, புதுடெல்லி - உறுப்பினர், அரசு செயலாளர் - பள்ளிக்கல்வித்துறை - உறுப்பினர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் - உறுப்பினர்-செயலர்.
மேற்கண்ட குழு உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 6.7.11-க்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து அந்த நிபுணர் குழு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. நிபுணர் குழுவினர் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்து 4 முறை ஆய்வு செய்தனர். இதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் 597 பக்க அறிக்கையாக தயாரிக்கப்பட்டது.
இந்த அறிக்கை சென்னை ஜகோர்ட்டில் நேற்று(6.7.2011) தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சு முன்பு அட்வகேட் ஜெனரல் நவநீதிகிருஷ்ணன், ஜகோர்ட் பதிவாளர் ஜெனரல் விமலா ஆகியோர் நிபுணர்கள் குழு தயாரித்த சமச்சீர் கல்வி அறிக்கையை தாக்கல் செய்தனர். வழக்கு தொடர்ந்த மனுதார்களுக்கும் இந்த அறிக்கை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணைக்கு 7-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அன்று முதல் தினந்தோறும் வழக்கு விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.
ஜகோர்டில் தாக்கல் செய்யப்பட்ட நிபுணர் குழு தயாரித்த அறிக்கையில் கீழ்கண் ட தகவல்கள தெரிவிக்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை செயல்படுத்த முடியாத அளவிற்கு குறைகள் உள்ளன. கல்விக்கான தேசிய ஆராய்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) 2005 ல் வடிவமைத்த தேசிய பாடத்திட்டம் வடிவமைப்புக்கு ஏற்ப சமச்சீர் பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை. அதற்கு இணையாக தயாரிக்கப்படவில்லை. அவசர கோலத்தில் இந்தப் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மெட்ரிக்குலேஷேன் தரத்திற்கு சில பாடங்கள் அமைந்துள்ளன. இதனை மாணவர்களால் புரிந்துகொள்ள முடியாது. தமிழில் இருந்து அங்கிலத்தில் மொழி மாற்றம் செய்ததில் தவறுகள் நிறைந்துள்ளன. மொழிப் பாடத்தில் இலக்கணப் பிழைகள், கருத்துப் பிழைகள் உள்ளன. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே இந்த சமச்சீர் பாடத்திட்டத்தை கொண்டு இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த இயலாது. இந்த பாடத்திட்டங்கள் முழுமையாக திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.