எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.1 - மத்திய பட்ஜெட்டில் தனி நபருக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ. 1.60 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 80 வயது மற்றும் அதற்கு மேல் வயது உள்ளவர்களுக்கு வரிசலுகை அளிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமகனுக்கான வயது வரம்பு 65-ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2011-2012-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று பாராளுமன்ற லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் கூறியதாவது:
தனிநபர் வருமான வரிவிலக்கிற்கான உச்சவரம்பு ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் முதியவர்களான அதாவது 80 வயதிலும் அதற்கு மேலும் உள்ளவர்களுக்கு வரிசலுகைகள் அளிக்கப்படும். தற்போது மூத்த குடிமக்களுக்கான வயது 65 ஆக இருக்கிறது. இதை 60 ஆக குறைக்கப்படும்.
தனிநபர் வருமானவரிவிலக்கு உச்சவரம்பு ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதால் வரி செலுத்துபவர்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வீதம் மிச்சமாகும். மூத்த குடிமக்களுக்கு வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் மூத்த குடிமக்களுக்கு அதாவது 80 வயதிற்கும் மேல் உள்ளவர்களுக்கு வருமானவரிவிலக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயத்தில் சேவை துறை விரிவாக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் மூலம் பயணம் செய்தல், ஸ்டார் ஓட்டலில் தங்குபவர்கள் மற்றும் குளிர்சாதன வசதியுள்ள ரெஸ்டாரண்ட்களில் மதுபானம் குடிப்பவர்களுக்கு செலவு அதிகமாகலாம். பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மேலும் வரி சலுகை கிடைக்கும்.
நாட்டில் பணவீக்கம் குறைந்தாலும் இன்னும் கவலை அளிக்கக்கூடிய வகையில்தான் இருக்கிறது. அதேசமயத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையாலும் நடவடிக்கையாலும் வரும் மாதங்களில் பணவீக்கம் குறையலாம் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அடுத்தாண்டு சராசரி பணவீக்க சதவீதம் குறைவாக இருக்கும். நாட்டில் உணவு பணவீக்கம் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20.4 சதவீதமாக இருந்தது.
இது படிப்படியாக குறைந்து கடந்த ஜனவரி மாதம் 9.3 சதவீதத்திற்கு வந்துவிட்டது. பல்வேறு இடையூறுகளுக்கும் இடையே இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில் தேவை மற்றும் சப்ளை விகித்தை சரிக்கட்ட வேண்டும். நடப்பு நதியாண்டில் முதல் அறையாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.9 சதவீதமாக இருந்தது.
நீண்டகாலமாக செயல்படுத்தப்படாமல் இருக்கும் பொருள்கள் மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை செயல்படுத்தும் வகையில் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும்.
ஜிஎஸ்டி முறையை வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதியில் இருந்து அமுல்படுத்தப்படவிருந்தது. ஆனால் அதற்கான திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாமல் இருந்தது. இந்த மசோதா நிறைவேற வேண்டுமென்றால் பாராளுமன்ற இருசபைகளிலும் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி வேண்டும். இந்த மசோதா நிறைவேறினால் பாராளுமன்றத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கும் அதிகாரம் கிடைக்கும்.
விவசாயம் மற்றும் சேவை துறைகளில் நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளது. விவசாயத்துறையில் கடந்த டிசம்பர் மாதம் முடிய 9 மாதத்தில் வளர்ச்சி விகிதம் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயத்தில் கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் இந்த வளர்ச்சி விகிதத்தில் இருந்து 1.6 சதவீதம் குறைந்திருந்தது. முதலீடு, இன்சூரன்ஸ், ரியல் ஸ்டேட், வர்த்தக சேவைகளில் கடந்த டிசம்பர் மாதம் முடிய வளர்ச்சி விகிதம் 11.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் இந்த வளர்ச்சி விகிதம் வெறும் 8.5 சதவீதமாக இருந்தது. மின்சார துறை, கியாஸ், மற்றும் தண்ணீர் சப்ளை ஆகிய சேவைதுறையிலும் வளர்ச்சி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஏழைகளுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மிகவும் ஏழைகளுக்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மான்யங்கள் சரியாக அவர்களுக்கு போய் சேருவதில்லை. இந்த மான்யங்கள் தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றன. இதை தடுக்கும் வகையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மிகவும் ஏழைகளுக்கு மண்ணெண்ணெய் மான்யம் மற்றும் உரம் மான்யதுக்கான பணம் அவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். இது அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் அமுல்படுத்தப்படும். மண்ணெண்ணெய்,கியாஸ், மற்றும் உர விநியோகம் சரியான முறையில் கிடைக்க இந்த வழிவகையை கையாளப்படும். இதற்கான விதிமுறைகளை நந்தன் நிலேகனி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பணிக்குழு உருவாக்கி வருகிறது. இதன் இடைக்கால அறிக்கை வரும் ஜூன் மாதத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
மத்திய எக்சைஸ் வரியை கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் அளவுக்கு குறைக்க முடியாது. 10 சதவீத எக்சைஸ் வரி தொடரும். மேலும் 130 வகையான பொருட்களுக்கு ஒரு சதவீத எக்சைஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் அடிப்படை தேவையான உணவு மற்றும் எரிபொருள்களுக்கு வரிவிலக்கு தொடரும். தங்கம் மற்றும் வைர கற்கள் புதிய வரிவிதிப்புக்கு உட்படாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: