முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலில் அகதிகள் படகு மூழ்கி 197 பேர் பலி

வியாழக்கிழமை, 7 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

சூடான்,ஜூலை.- 7 - செங்கடலில் அகதிகள் படகு மூழ்கியதில் 197 பேர் பலியானார்கள்.  சூடானை சுற்றியுள்ள நாடுகளில் கலவரம் நடந்து வருகிறது. எனவே அங்கு வாழும் மக்கள் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகிறார்கள். அது போன்று சுமார் 200 பேர் ஒரு படகில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களது படகு சூடான் கடல் பகுதியில் செங்கடலில் சென்ற போது திடீரென மூழ்கியது. எனவே அதில் பயணம் செய்த அனைவரும் மூழ்கினர். இது பற்றி சூடான் கடற்படையினருக்கு தெரிய வந்தது. உடனே மீட்பு படையினர் அங்கு சென்றனர். இருந்தும் படகில் பயணம் செய்த 3 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மற்ற 197 பேரை மீட்க முடியவில்லை. எனவே அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த படகு எங்கிருந்து புறப்பட்டு வந்தது எனத் தெரியவில்லை. அது மூழ்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்