முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் இருந்த கணவரை சூட்கேசில் மறைத்து கடத்தியவர் பிடிபட்டார்

வியாழக்கிழமை, 7 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

செதுமால்,ஜூலை.- 7 - மெக்சிகோ சிறையில் இருந்து கணவரை சூட்கேசில் மறைத்து கடத்திய பெண் போலீஸ் சோதனையில் சிக்கினார். மெக்சிகோவை சேர்ந்தவர் ரமீரஷ். சட்டவிரோதமாக ஆயுதம் கடத்தியதாக இவரை போலீசார் கைது செய்தனர். இதற்காக அவருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் கரீபியன் மாகாணத்தில் உள்ள செதுமால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது மனைவி மரியா டெல் மார் அர்ஜோனா. அவர் தனது கணவர் ரமீரஷை பார்க்க செதுமால் சிறைக்கு வந்திருந்தார். திரும்பி சென்ற போது ஒரு சூட்கேசை இழுத்து சென்றார். அப்போது அவர் பதட்டத்துடன் காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த சிறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.
எனவே அவரது சூட்கேசை திறந்து பார்த்தனர். உள்ளே அவரது கணவர் கால், கைகளை மடக்கியபடி படுத்திருந்தார். அவரை அர்ஜோனா சூட்கேசில் வைத்து சிறையில் இருந்து வெளியே கடத்தியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்