முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி ராஜினாமா செய்திருப்பது காலம் கடந்த செயலாகும்: பா.ஜ.க

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      இந்தியா

புது டெல்லி,ஜூலை.- 9 - தயாநிதி மாறன் ராஜினாமா செய்திருப்பது காலம் கடந்த செயலாகும் என்று பா.ஜ.க. கூறியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜலடேகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் ராஜினாமா செய்தது காலம் கடந்து நடந்திருக்கிறது. முன்கூட்டியே ராஜினாமா செய்திருக்க வேண்டும். இவரது ராஜினாமா மூலம் 2 ஜி அலைக்கற்றை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததை நியாயப்படுத்த முடியாது. மேலும் இந்த விவகாரம் இத்துடன் முடிவடைந்து விடவில்லை என்றார்.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரியிடம் கேட்ட போது, நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தாரா, இல்லையா என்பதை மத்திய அரசோ, தயாநிதி மாறனோதான் தெரிவிக்க வேண்டுமே தவிர, காங்கிரஸ் கட்சி எந்த கருத்தும் கூற முடியாது என்று அவர் தெரிவித்தார். தயாநிதி மாறன் ராஜினாமா செய்திருப்பதன் காரணமாக காங்கிரஸ், தி.மு.க. இடையேயான உறவில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்