முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமாவை கொல்ல திட்டம்: கொலைக் குற்றவாளி கைது

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

சிகாகோ,ஜூலை.- 9 - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை கொலை செய்ய திட்டமிட்டதாக கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். சிகாகோவை சேர்ந்த ஜேம்ஸ் வெர்னான் மெக்வி. வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், தெற்கு டகோடா பகுதியில் உள்ள மேபெலி ஷெய்ன் என்ற 75 வயது மூதாட்டியின் வீட்டில் புகுந்து கத்தியால் அவரை குத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. பின்னர் அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேபெலியின் காரில் ஏறி தப்பி சென்று விட்டார். இது குறித்து சென்சார் மூலம் வாகனங்களை கண்டறியும் கருவியை கொண்டு ஜேம்ஸ் ஓட்டி சென்ற காரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை கொலை செய்ய முடிவு செய்ததாகவும், அந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் வாஷிங்டன் செல்ல கார் தேவைப்பட்டதால் மேபெலி ஷெய்னை கொன்றதாகவும் தெரிவித்தார். ஜேம்ஸை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். அவர் மீது போதைப் பொருள் வைத்திருந்தது, போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றது, அனுமதி இல்லாமல் வாகனத்தை ஓட்டி சென்றது உட்பட மேலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்