எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மான்செஸ்டர், ஜூலை - 11 -இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி 3 - 2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் ஒரு நாள் போட்டியை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற 2 ஒரு நாள் போட்டிகளை இலங்கை அணி கைப்பற்றி தொடரில் முன்னிலை பெற்றது. நான்காவது ஒருநாள் போட்டியை இங்கிலாந்து அணி கைப்பற்ற போட்டித் தொடர் 2 - 2 என்ற கணக்கில் சமனானது. இதைத் தொடர்ந்து இந்த போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் இறுதி போட்டி மான்செஸ்ட்டரில் நடைபெற்றது. ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் பேட்டிங்கை தேர்வு செய்தார். கருணாரத்னே இலங்கை தரப்பில் ஒருநாள் போட்டியின் அறிமுக வீரராக களமிறங்கினார்.
இங்கிலாந்து தரப்பில் துவக்க வீரர்கள் கிய்ஸ்வெட்டர் மற்றும் குக் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை தந்தனர். குக் 31 ரன்கள் எடுத்த நிலையில் ரந்தீவின் பந்தில் சங்ககாராவால் ஸ்டம்ப் முறையில் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக ட்ராட் களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது கிய்ஸ்வெட்டர் 43 ரன்கள் எடுத்த நிலையில் பிரசாத்தின் பந்தில் போல்டானார். தொடர்ந்து ட்ராட்டுடன் களமிறங்கிய பீட்டர்சன் அதிகம் ரன் எதுவும் எடுக்காத நிலையில் பிரசாத்தின் பந்தில் சங்ககாராவால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து மோர்கன் மற்றும் ட்ராட் இணை அதிரடியாக ரன்களைக் குவித்தது. இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 213 ஆக உயர்ந்தபோது அரை சதம் அடித்திருந்த மோர்கன், தில்சனின் பந்தில் அவுட்டானார். அடுத்த வந்த பெல் 4 ரன்களில் ரந்தீவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க 222 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து. அதுவரை சிறப்பாக விளையாடிய ட்ராட்டும் 72 ரன்கள் எடுத்த நிலையில் ரந்தீவ் பந்தில் போல்டானார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அதிகமாக ரன்களை எடுக்காவிட்டாலும் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களை எடுத்து ஓரளவு வலுவான நிலையை எட்டியது. இலங்கை தரப்பில் ரந்தீவ் 5 விக்கெட்டுகளையும், பிரசாத் 2 விக்கெட்டுகளையும், தில்ஷன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
50 ஓவர்களில் 269 ரன்கள் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அறிமுக வீரர் கருணாரத்னே மற்றும் கேப்டன் தில்ஷன் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ப்ரேஸ்னன் வீசிய 2 வது ஓவரில் அறிமுக வீரர் கருணாரத்ன 4 ரன்களே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது இலங்கை அணி 7 ரன்களை எடுத்திருந்தது. அடுத்ததாக சங்ககாரா களமிறங்கினார். இந்நிலையில் தில்ஷன் இம்முறையும் இலங்கை அணியை ஏமாற்றினார். 4 ரன்களே எடுத்திருந்த அவர் ப்ரேஸ்னன் பந்தில் டென்பெக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இவரைத் தொடர்ந்து ஜெயவர்த்தனே, சங்ககாராவுடன் ஜோடி சேர்ந்தார். ஜெயவர்த்தனேவும் 9 ரன்களே எடுத்திருந்த நிலையில் ஆண்டர்சன் வேகத்தில் குக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இவரைத் தொடர்ந்து சண்டிமால் களமிறங்கினார். இவரும் சங்ககாராவும் ஓரளவு விக்கெட் விழாமல் ரன்களை உயர்த்தினர். அணியின் எண்ணிக்கை 123 ஆக இருந்தபோது 54 ரன்களை எடுத்திருந்த சண்டிமால் ஸ்வானின் சுழலில் விக்கெட்டை இழந்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் மேத்யூஸ் களமிறங்கினார். இந்நிலையில் நன்கு விளையாடிக்கொண்டிருந்த சங்ககாரா 48 ரன்கள் எடுத்த நிலையில் ப்ரேஸ்னன் வேகத்தில் வீழ்ந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 30 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ஆக இருந்தது. இதற்கு பின் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் (62) மற்றும் மெண்டிஸ் (48) ஜோடி ஓரளவு ரன்களை சேர்த்தாலும் இலங்கை வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் அந்த அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் 48.2 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. ரந்தீவ் மற்றும் பிரசாத் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ப்ரேஸ்னன் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், டெம்பேக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பட்டேல், ஸ்வான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை 3 - 2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. ட்ராட் ஆட்ட நாயகனாகவும், அலிஸ்டர் குக் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்மூலம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.