முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கராச்சி வன்முறை: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

கராச்சி,ஜூலை.- 11 - பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்று வரும் கலவரத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.  கராச்சியில் கடந்த 5 நாட்களாக இன அரசியல் ரீதியான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குவாஸ்பா, ஒராங்கி, கட்டி, பஹாரி போன்ற இடங்கள் கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மக்கள் வெளிவர தொடங்கியுள்ளனர். கலவரம் உச்சக்கட்டத்தில் இருந்த கடந்த 4 நாட்களாக உணவு கூட கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர்.
கராச்சி நகர் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மன்சூர் விரைவில் அனைத்து கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார். கலவரம் காரணமாக மூடப்பட்டிருந்த பெட்ரோல் நிலையங்கள், கடைகள் ஆகியவை திறக்கப்பட்டன. பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி கலவரம் குறித்து உயரதிகாரிகளுடன் விவாதித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்