எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.14 - நான் தவறாக பேசவில்லை என்று பத்திரிகைகளுக்கு விளக்கம் அளித்ததை படித்து விட்டு கருணாநிதி முரசொலி நாளிதழில் தானே ஒரு கேள்வியை கேட்டு தானே பதிலும் எழுதியுள்ளதிலிருந்து அவரை யாராலும் திருத்தவே முடியாது என்று தா.பாண்டியன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்ரில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரு சட்டப்பேரவை உறுப்பினர்கட்கு நடந்த பாராட்டு விழாக் கூட்டத்தில் நான் பேசிய போது தமிழ்நாடு அரசின் மீது குற்றம் சாட்டி, குத்திக்காட்டிப் பேசியதாக சில தின, வார ஏடுகளில் செய்தி வெளியாகியிருந்தது. அதற்கு விளக்கம் கூற வேண்டிய அவசியம் நேர்ந்ததால், 10.7.11 அன்று, பத்திரிகைகட்கு விளக்க அறிக்கை ஒன்றை எழுதியனுப்பினேன். அதைப் படித்துவிட்டு, கருணாநிதி 13.7.11 முரசொலியில், தானே ஒரு கேள்வி கேட்டு தானே பதிலும் எழுதியுள்ளார். ஜனசக்தியைத் தவறாமல் படித்து வருதற்காக நன்றி. பக்கம், பத்தி, வரிகள் உட்பட மேற்கோள் காட்டி, நான் பயந்து, மிரண்டு, மழுப்ப முயற்சிப்பதாக எழுதி முடித்துள்ளார்.
என் பேத்திக்குத் திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சி ஏழாம் தேதி நடைபெற்றது. திருமணம் ஜூலை 2ல் பாளையங்கோட்டையில் நடந்தது. முதல்வர் ஜெயலலிதாவை, மரியாதை மரபுப்படி அழைத்தேன். அவரும் வரவேற்பில் கலந்து கொள்வதாகக் கூறினார். பாளையங்கோட்டைத் திருமணத்திற்கு வாழ்த்துச் செய்தியனுப்பியிருந்தார். ஏழாம் தேதி அவரது வருகைக்காக காவல்துறையும், அரசுப் பிரதிநிதிகளும் எனக்கு முன்பாகவே வந்து அவர்களது பணிகளில் மண்டபத்தில் ஈடுபட்டிருந்தனர். மாலை 6.40 க்கு அவர் வரக்கூடிய நேரமும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது பல்வேறு பொதுப்பணிகளோடு உடல்நலக்குறைவு என்பதால், வர இயலவில்லை என்பதை தனது செயலாளர்களில் ஒருவர் மூலம் நேரில் தெரிவிக்க அனுப்பியவர், அப்போதும் ஒரு வாழ்த்துச் செய்தியையும், மணமக்களுக்கு ஏதோ ஒரு பரிசுப் பொருளையும் அனுப்பியிருந்தார். அதை மணமக்கள் அறிவர். அவருடைய பிரதிநிதி நேரில் முதல்வர் ஜெயலலிதா வர இயலாமை குறித்து விளக்கிய பின்னரே சென்றார்.
இதனால் நானோ, என் குடும்பத்தாரோ, எங்களைவிட எங்கள் கட்சித் தோழர்களோ யாரும் ஏமாற்றம் அடையவில்லை. கோபப்படுவதற்கும் எதுவுமில்லை. பொதுவாழ்க்கையில் அதுவும் மாநில முதலமைச்சர் பொறுப்பில் உள்ளவர், துக்கடமைகளுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும். நட்பு, உறவு எல்லாம் அதன் பின்னர் தான் வரவேண்டும். எனவே முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்காக நன்றி கூறினேன்.
ஆனால், ஆறாம் தேதி நான் தமிழ் மாநில அரசைக் கண்டித்துப் பேசியதால், முதல்வர் ஜெயலலிதா வராமல் புறக்கணித்துவிட்டார். அதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம் என்று எழுதிய பத்திரிகைகளில், டெக்கான் கிரானிக்கல் பத்திரிகை எங்களில் கட்சித் தோழர்கள் நடுநடுங்கி, கலங்கிப் போனதாக, படம் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இதைப் படித்த நான் கருணாநிதி பாணியில் படித்தேன்ரசித்தேன்தூக்கி விசினேன் என்று கூறியிருக்கலாம்...
ஆனால், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி எனக்கு ஒரு முக்கியப் பொறுப்பைக் கொடுத்துள்ளது. எனவே, அந்தப் பொறுப்பிற்குரிய பிரதிநிதி என்ற முறையில், சொந்த நலனுக்காகப் பணியவும் முடியாது. சொந்த விருப்பு, வெறுப்பு அடிப்படையில் எந்தக் காரியத்தையும் செய்யவும் முடியாது; கூடாது.
ஆறாம் தேதி நான் பேசியதால், முதல்வர் ஜெயலலிதா கோபமடைந்து வரவில்லை என்பது சுத்த அபத்தம். அன்றைக்கு அவர் சிவக்குமார் மகன் திருமணத்திற்கும் செல்லாமல், வாழ்த்து மட்டும்தான் அனுப்பியிருந்தார்.
எனவே ஒன்றைப் புறக்கணித்து இன்னொன்றுக்கு மரியாதை செய்தார் என்பது பொய். மறுநாள் சிவக்குமார் வீட்டிற்கு முதல்வர் போனது அவரது கால அவகாசத்தைப் பொறுத்தது.
எனவே, என் வீட்டிற்கு ஏன் வரவில்லை? எனக் கேட்கும் சின்னப்புத்தி என்னிடம் இல்லை. அவர் புறக்கணித்தார் என்பதும் பொய்.
ஆனால், விளக்கம் தர நானே முடிவு செய்தேன். எழுதினேன். ஏன் எனில், நான் பேசியதை நிருபர்கள் தவறாகப் பிரசுரித்து விட்டார்கள் எனப் பலர் மறுப்புக் கூறியிருப்பதைப் படித்துள்ளேன். அதை நான் பின்பற்றவில்லை.
நான் அவசரத்தில், வேகமாகப் பேசியதால் புரிவதில் தவறு நிகழ்ந்திருக்கிறது. அதிலும், கேட்டவர்கள் மீது பழி போடாமல், பேசியவன் தவறான கருத்துக்கு இடம் தராது பேசியிருக்க வேண்டும். எனவே நாமே விளக்குவது மேல் என்றே கருதினேன். ஆனால், கட்சி உறவு கெட்டுவிடும் என அதை மழுப்புவதாக கருணாநிதி அவரது சொந்த வியாக்யானத்தை எழுதியுள்ளார்.
நாமார்க்கும் குடியல்லோம் .... பணிவோம் அல்லோம் என்பதை அவரது ஆட்சி காலத்தில், அதிகாரத்தில் இருந்து எய்த எல்லா அம்புகளையும் நாங்கள் எவ்வாறு சந்தித்தோம் என்பதை அவர் அறிவார்.
கட்சியை சட்ட விரோதமாக அறிவித்து, நரவேட்டையாடிய காலத்திலும் அஞ்சாது நின்ற கட்சித் தோழர்கள் கதிகலங்கிப்போனதாக கிரானிக்கிள் எழுதியதை, விபரமறிந்த கருணாநிதி எழுதியிருப்பது, அவர் திருந்த மாட்டார் எவராலும் திருத்தவே முடியாது என்பதையே காட்டுகிறது.
நான் விளக்கமாக, தெளிவாக இருபொருள்பட இடம் தராது பேசியிருக்க வேண்டும் என்பதை பொதுவாழ்க்கையின் நேர்மை கருதி ஏற்கிறேன்.
ஆறாம் தேதி நிகழ்ச்சியில் நான் பேசியபோது, முந்தைய ஆட்சி மிகப்பெரும் கடன் சுமையை இன்றைய அரசின் மீது சுமத்தி விட்டுப் போயிருப்பதை, கடன் கணக்கோடு கூறினேன். நிர்வாகச் சீர்கேட்டால், தமிழ்நாடு நிலைகுலைந்து போயிருப்பதையும் குறிப்பிட்டேன்.
ஆட்சிப்பொறுப்புக்கு இப்போது பொறுப்பேற்றுள்ளவர்கள், வந்து 40 நாட்கள்கூட ஆகவில்லை. பல சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், முதல்வருக்குள்ள ஒரு பெரும் சிரமத்தை நாம் உணர வேண்டும்.
மந்திரிகளை நியமிப்பது, நீnullக்குவது என்பதை அவர் நினைக்கிறபடி செய்யலாம். அதை எத்தனை தடவையும் செய்யலாம். தடுக்க, நிறுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் அரசு நிர்வாகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக இருக்கிறார்கள், அவர்களை நினைத்தபடி nullநீக்கவோ, நியமிக்கவோ அதிகாரம் இல்லை. ஆனால், அந்த அதிகாரிகள் மூலம்தான், திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
இவற்றை மனத்திற்கொண்டு நாம், தேர்தலில் ஓரணியில் நின்ற கட்சிகள் கோரிக்கைப் பட்டியல்களை நீnullட்ட வேண்டும். நாமும் ஆளும்கட்சியின் ஒரு அங்கமும் அல்ல. எதிர்ப்பதற்காகவே உள்ள எதிர்க்கட்சியும் அல்ல. எனவே, நாட்டின் இக்கட்டான நெருக்கடிகளை உணர்ந்து நமது செயல்கள் அமையவேண்டும் என்றேன்.
மந்திரிகளை மாற்றுகிற வேகத்தில் நிர்வாக மாற்றங்களைச் செய்ய முடியாது எனக் கூறியதைத்தான், மந்திரிகளை மாற்றியதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என நான் கூறியதாக எழுதிவிட்டார்கள். ஜனசக்தி நிருபர் கூட்டத்திற்கு வரவே இல்லை. பிற பத்திரிகைகளில் வந்ததை எடுத்துப் போட்டதால் கருணாநிதிக்கு ஒரு ஆயுதமாகக் கிட்டியுள்ளது.
நள்ளிரவில் தூக்கத்தில் தட்டி எழுப்பிக் கேட்டாலும், ஈழத்தமிழர்களின் உரிமைக்கான கோரிக்கையைத்தான் முதல் கோரிக்கையாக வைப்பேன். அத்தகைய தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியதை, உடனே பாராட்டித் தீர்மானம் போட்ட கட்சியின் பிரதிநிதி ஒன்றுமே நடக்கவில்லை என்று கூற முடியுமா?
என்னை விடுங்கள் நான் சாதாரண மனிதன். திகார் சிறைக்குச் செல்லும் தகுதி பெறாதவன். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியக் குழு தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆதரித்து, மத்திய அரசை வற்புறுத்தி தேசிய அளவிலான இயக்கத்துக்கும் அறைகூவல் விட்டு, நடத்திய பிறகு, மந்திரிகளை மாற்றியதைத் தவிர வேறு என்ன நடந்தது? என்று கேட்பேனா? கருணாநிதியே , நாங்கள் தெளிவாக உறுதியாக இருக்கிறோம்.
மூன்றரை ஆண்டுகளாக அரசு விளம்பரம் எதையும் தராது ஜனசக்தியை முடக்கி விட முயன்றீர்கள். அஞ்சி, மண்டியிட்டோமா?
அதே காலத்தில் உங்களது முரசொலி, தினகரன், குங்குமம் ஏடுகட்கும், சன் டி.வி. கலைஞர் டி.வி. ஆகியவற்றிற்கும் தமிழ்நாடு அரசு வழங்கிய கோடிகள் பற்றிய கணக்கும் தெரியுமல்லாவா?
தா.பாண்டியன் சாதாரண சாமான்ய மனிதன்தான். ஆனால், அவன் கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரதிநிதி. அக்கட்சியால் பயிற்றுவிக்கப்பட்டவன்.
நேர்மைக்கும் nullநீதிக்கும் வணங்குவோம் எந்த அதிகாரத்திற்கும் எங்கள் தலை வணங்காது. நின்றவாறு வீரமரணத்தைச் சந்திப்போமேயன்றி, ஊழல் சகதியில் உழல மாட்டோன் என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.