முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி: முதல்வர் உத்தரவு

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.14 - ரம்ஜான் மாதம் நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் மொத்த அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு வழங்க அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு ரம்ஜான் மாதம் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு அனுமதி பெற்ற பள்ளிவாசல்களில் கஞ்சி தயாரிப்பதற்கு தேவையான அரிசிக்கு உரிய மொத்த அனுமதியை புதுப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரடியாக பள்ளிவாசல்களுக்கு வழங்குவார்கள். ரம்ஜான் மாத நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக 3801 டன்கள் அரிசியை தமிழ் நாட்டிலுள்ள அனைத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளிலும் 29.7.2011 அன்று தயார் நிலையில் வைத்திருக்கவும் தமிழ்நாடு நுகார் பொருள் வாணிப கழகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

எனவே தமிழகத்தில் அனுமதி பெற்று ஏற்கனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வரும் பள்ளி வாசல்கள் மொத்த அனுமதியை புதுப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலிருந்து அரிசியை பெற்றும் பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்