எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.14 - சட்டவிரோத சமூக விரோத செயல்களிருந்து தப்பிக்க மீடியாவை ஆயுதமாக பயன்படுத்தும் ராட்சதர்கள் தான் சன் டி.வி.மற்றும் நக்கீரன் நாளிதழ் என்று நித்தியானந்தா குற்றம் சாட்டினார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுவாமி நித்தியானந்தர் கூறியதாவது: 18 நாடுகளில் 83 நகரங்களில் என்னுடைய இந்த பேட்டி நேரடியாக ஒளிபரப்பாகிறது. முன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை வாழ்த்த வணங்குகின்றேன். அவரது வாழ்க்கை ஆனந்தமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என்னைப் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படக்காட்சி முழுக்க முழுக்க சித்தரக்கப்பட்டது. 500 புத்தகங்கள் ,8000 மணிநேரம் பிரச்சாரம், 3 பத்திரிக்கைகள், 1 ஸ்பேஸ் சானல் நடத்துகின்ற பத்திரிக்கையாளனகவும் உங்கள் முன் நிற்கின்றேன். தாங்கள் செய்கிற சமூகவிரோத, சட்ட விரோத செயல்களிருந்து தப்பிக்கவும், திசை திருப்பவும் சில ராட்சசர்கள் மீடியாவை ஆயுதமாக உபயோகிறார்கள். சமூக பொறுப்போடு வீடியோ விவகாரத்தை எழுதிய பத்திரிக்கைகள் , சானல்கள் உண்டு. ஆனால் அழிக்க நினைத்த ராட்சதர்கள் சன்டிவி, நக்கீரன் ஆகியோர். பொதுவாக்கை தூய்மைபற்றி அக்கறையே இல்லாதவர்கள். இவர்கள் எத்தனை நாடுகளில் பணத்தை வைத்துள்ளனரோ அத்தனை நாடுகளிலிருந்து பணத்தை கொண்டு வந்து சேவை செய்கிறவன் நான்.
என்ன வேண்டுமானாலும் எழுதுவதா? நக்கீரன் அவதூறாக எழுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் பெஞ்ச் வரை சென்று தடை வாங்கினோம். அதன்பிறகு 13 முறை அவதூறாக எழுதினார்கள். கோர்டில் ரகசியமாக மன்னிப்புக்கேட்டுக்கொண்டே தொடர்ந்து எழுதினார்கள் என்றால் என்ன பத்திரிக்கை தர்மம். சமூக பொறுப்புள்ள பத்திரிக்கை தானா என்று மற்றவர்கள் கேள்வி கேட்க வேண்டும்.
நிர்வாணமாக இருப்பது போல் போஸ்டர் ஒட்டுகின்றார்கள், போஸ்டர் ஒட்டுவதற்கும் அளவில்லையா?. நடிகையின் குளியலறை காட்சியை ஒட்டலாம். சாமியார் குளிப்பதுபோல் ஒட்டலாமா?. மீடியாக்களில் இருக்கும் புனித தன்மையை கெடுத்துவிட்டார்கள். நான் சாமியார் இல்லை என்கின்றார்கள். இவர்கள் மீடியா இல்லை என்கின்றேன் நான். வீடியோவை உருவாக்கியதும், பரப்பியதும் கிரிமினல் குற்றம். சன்டிவியினர் கரிப்பு நில அபகரிப்பு மற்றும் பணம் கேட்டு மிரட்டனர். அடித்து உதைத்து பணம் பிடிங்கினர். இதுபற்றி கமிஷ்னரிடம் புகார் கொடுத்துள்ளோம். யார் பிடுங்கினார்கள் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று பெயருடன் கொடுத்துள்ளோம்.
முதலில்
ரூ100 கேட்டு கேட்டு மிரட்டினார்கள. சாமியார் என்பதால் டிஸ்கவுன்ட் பண்ணி ரூ.60 கோடி கேட்டார்கள். கொலை மிரட்டல் விடுத்தவர்களின் பெயர்களை புகாரில் தெரிவித்துள்ளேன். இதனால் வரை ஏன் புகார் அளிக்க வரவில்லை என்று கேட்கிறார்கள். ஏர்செல் சிவசங்கரன் கோடிஸ்வரன். அவரே இவர்கள் மிரட்டல் தாங்காமல் நாட்டை விட்டே ஓடிவிட்டார். நான் சன்னியாசி என்னை கொன்றுவிட்டு மக்கள் கொன்றுவிட்டார்கள் என்று தெரிவித்து விடுவார்கள். எல்லா சானல்களுக்கும் லெனின் கருப்பன் கேசட்டை கொடுத்தார். சன்டிவியை மட்டும் ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள் என்கிறார்கள். அவர்கள் மட்டும் தான் எங்களை மிரட்டினார்கள். இதுவரை அவர்கள் பணம் பிடுங்கியது பற்றி புகார் கொடுத்துள்ளோம். ஆனால் புகார் கொடுத்ததை விட அதிகப் பணம் பிடுங்கப்பட்டுள்ளது. பல பேர் பணம் போனாலும் பரவாயில்லை என்று பயந்து புகார் கொடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் கொடுத்த புகாருக்கும் நடவடிக்கை இல்லை. இதுவரை 120 தியான மையங்களை கூலிப்படைகளை வைத்து அடித்து நொறுக்கினார்கள். அவைகள் அனைத்தும் சிவாலய மடங்கள் .மதத்தின் மீது தாக்குதல் நடத்துள்ளனர். 17 இடங்களில் எங்கள் சன்னியாசினிகளின் புடவைகளை உருவினார்கள். புடவை உருவுகிற புத்தி உங்களுக்கு போகவே போகதா, ராட்சதர்கள். 7 இடங்களில் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள் பெங்களூர் ஆசிரமத்துக்குள் சன்டிவி கேமராக்களுடன் புகுந்த ரவுடிக் கும்பல் 3 சன்னியாசிகளை பெட்ரோல் குண்டு வீசி கொழுத்தினார்கள். சாமி எங்கே என்று தேடினார்கள். அனைத்தும் வீடியோ ஆதாரத்துடன் எடுத்து கமிஷனரிடம் கொடுத்துள்ளோம். இந்த தாக்குதல் பற்றி அமெரிக்காவில் உள்ள இந்து பெடரேஷன் என்கிற உலகளாவிய அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனுடைய தலைமை வழக்கறிஞர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். போலீஸ் விசாரணை, குற்றப்பத்திரிக்கை நகல்களை கேட்டுள்ளார். இதுபோன்ற குற்ற செயல்களை ஈடுபடுவோர் பிளாக் லிஸ்டில் வைக்கப்படுவர்.
எனக்கு எதிராக ரஞ்சிதாவை வழிக்கு கொண்டுவர விபச்சார வழக்கு மிரட்டல், பணம் ,எம்.எல்.ஏ. பதவி ஆசை காட்டப்பட்டது. என்னை பற்றி வீடியோ கேசட் ஒருவேளை உண்மை என்று வைத்துக்கொண்டால் ஒரு ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. என்னை என்துறை சார்ந்த சன்னியாசிகள் கேள்வி கேட்கலாம். அல்லது பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கலாம். பொதுவாழ்வில் தூய்மை இல்லாத இவர்கள் எப்படி மிரட்டலாம். இவர்கள் மீது புகார் கொடுத்தில் சில விபரங்களை மட்டும் வெளியே சொல்லுங்கள் என்று போலீசார் கூறியுள்ளனர். நாங்கள் குற்றம் சாட்டியுள்ளவர்கள் பெயர்களை கூறினால் சாதிக்பாட்ஷா போல் எத்தனைபேர் சாவான் என்று எனக்கு தெரியாது. பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் வழக்கறிஞர் ஸ்ரீதர் ,நக்கீரன் கோபால் ஆகியோர் நேரடியாக பேசியுள்ளனர். ஐயப்பன் பேசி அடித்துள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் வீடியோவை போடுவோம் என்றனர். இதுபற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்திக்க புகார் அளிக்க நேரம் கேட்டிருந்தோம். கடைசிவரை அனுமதி கிடைக்கவில்லை.
பிரசன்னா என்பவர் லெனினுடைய வலது கை. நேரடியாக ரூ.35 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தார் என்று புகார் அளித்துள்ளோம். நக்கீரன் காமராஜ் மிரட்டியாதகவும் புகார் கொடுத்துள்ளோம். லெனின் கருப்பன் மீது கற்பழிப்பு முயற்சி புகார் அளித்துள்ளனர். வீடியோவில் நானும் ரஞ்சிதாவும் இருப்பதுபோல் காட்டப்படும் படுக்கை அறை என்னுடையது அல்ல. காட்டப்படுகின்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.
இந்த புகார் பற்றியெல்லாம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தெரிவிக்க நேரம் கேட்டுள்ளோம். கொடுக்கப்பட்ட புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகின்றேன், காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. கூடியவிரைவில் ஊழலுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் . இவ்வாறு சாமி நித்தியானந்தா தனது பேட்டியில் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.