முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை குண்டு வெடிப்பு: திருப்பதிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, ஜூலை 15 - மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மும்பை நகரில் கடந்த புதன்கிழமையன்று 3 இடங்களில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 18 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த தாக்குதலை அடுத்து நாட்டின் பல்வேறு நகரங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவில் ஹைதராபாத், விசாகப்பட்டணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் துறைமுக நகரமான விசாகப்பட்டணம், இரட்டை நகரங்களான ஹைதராபாத், செகந்ராபாத், வரலாற்று புகழ்மிக்க சார்மினார் ஆகியவை உட்பட ஆந்திராவின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்