எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் - 2 - தமிழகம் மற்றும் புதுவை மாநில சட்டசபைகளுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை மற்றும் புதுவை மாநில சட்டசபைகளுக்கான ஆயுட்காலம் வருகிற மே மாத மத்தியில் முடிவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய சட்டசபையை அமைப்பதற்கான தேர்தல் அட்டவணை குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைகளுக்கு ஏப்ரல் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். இதற்கான அறிவிக்கை மார்ச் 19 ம் தேதி வெளியிடப்படும்.
அன்றைய தினமே (மார்ச் 19) வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26-ம் தேதி என்றும் அவர் கூறினார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28-ம் தேதி என்றும், வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசிநாள் மார்ச் 30-ம் தேதி என்றும் அவர் அறிவித்தார். தமிழகம், புதுவை மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுமுதலே அமுலுக்கு வந்துவிட்டன. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 59 லட்சம் என்றும் அவர் கூறினார். மேலும் முதன் முறையாக வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தலைமை தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். தமிழகம், புதுவையில் ஏப்ரல் 13 ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெற்றாலும்கூட இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஒரு மாதம் கழித்து அதாவது வருகிற மே மாதம் 13 ம் தேதிதான் நடைபெறும் என்றும் குரேஷி கூறினார். ஓட்டு எண்ணிக்கை இவ்வளவு நீண்ட நாட்களுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தமிழகம், புதுவையில் தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
தமிழகம், புதுவை சட்டமன்ற தேர்தல்களோடு மேற்கு வங்காளம், அசாம், கேரளா ஆகிய மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் அட்டவணையையும் குரேஷி வெளியிட்டார்.
கேரள மாநிலத்திற்கான வாக்குப் பதிவும், தமிழகத்தைப் போலவே ஏப்ரல் 13 ம் தேதி நடைபெறுகிறது. இங்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. முதல் கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவில் 62 சட்டசபை தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக நடைபெறும் வாக்குப் பதிவில் 64 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதில் முதல்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 4 ம் தேதியும், அடுத்த கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11 ம் தேதியும் நடைபெறுகிறது.
மேற்கு வங்க மாநிலத்திற்கான வாக்குப் பதிவு 6 கட்டங்களாக நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 18, 23, 27 மற்றும் மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் இங்கு தேர்தல் நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 13 ம் தேதி நடைபெற இருக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த தேர்தல் பாதுகாப்பு பணிகளில் அந்தந்த மாநில போலீசாருடன், மத்திய துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் 2011-12 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே இந்த 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேற்கு வங்கமாநிலம், கேரளா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முஸ்தீபு செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணியை ஒழுங்குபடுத்துவதிலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதிலும் மும்முரம் காட்டி வருகின்றன. 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ