முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுகவுடன் கூட்டணி தேவையில்லை: இளங்கோவன்

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

தூத்துக்குடி, ஜூலை 16 - காங்கிரஸ் தேசிய பேரவை சார்பில் காமராஜர் பிறந்த தினவிழா பொதுக்கூட்டம் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் நடைபெறுகிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக தூத்துக்குடி வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது, 

எங்கள் தலைவர் சோனியாதான். தமிழகத்தில் புதிய தலைவரை சோனியா காந்தி நியமிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். திமுக உறவு தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின், தற்போது என முந்தைய நிலையே தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால்,தொண்டர்கள் காங்கிரஸ்- திமுக கூட்டணி முழுமையாக விரும்பவில்லை. ராகுல்காந்தி தமிழகத்திற்கு 4 முறை வந்தபோதும் திமுகவுடன் உறவு தேவையில்லை என்பதை எடுத்துரைத்தோம்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து நிற்க நாங்கள் விரும்புகிறோம்.இருப்பினும் மேலிடம் சொன்னால் எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். சேரக்கூடாத இடங்களில் சில சமயம் சேர வேண்டிய நிலை ஏற்படுகிறது.திமுக தவிர்த்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

கருணாநிதி ஊடகங்கள் மீது குற்றம் சாட்டுவது சரியானது.நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் கீழ்த்தரமாக விமர்ச்சித்தது சன் டிவிதான். எனவே அவர் கூறியது உண்மைதான்.தற்போது ஜனநாயகத்தில் செல்லா காசாக திமுக உள்ளது. அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புவோமா? திமுகவுடன் கொள்கை ரீதியான உறவு கிடையாது. தேர்தல் ரீதியான உறவு மட்டுமே உள்ளது.

பிரனாப் முகர்ஜி திமுகவுடன் கூட்டணி பலமாக இருக்கிறது என கூறியிருக்கிறார். அவர் பலம் வாய்ந்த அமைச்சர். அவர் அப்படித்தான் கூறுவார். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகிறோம்.திமுகவிற்கு ஜால்ராவாக இருக்க விரும்பவில்லை. அதிமுக ஆட்சி மிகவும் திருப்தியாக உள்ளது. காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. கட்டப்பஞ்சாயத்து காரர்கள் காணாமல் போய்விட்டார்கள். நில அபகரிப்புக்கு சிறப்பு பிரிவு வரவேற்கத்தக்கது. அனைத்து இடங்களிலும் நில அபகரிப்பு புகார்கள் உள்ளன. இவற்றின் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

பேட்டியின்போது மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஏ.பி.வி.பி.சண்முகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், முத்தையாபுரம் பஞ்சாயத்து தலைவர் அலெக்சாண்டர், தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர் பொன்.பாண்டியன், நகர காங்கிரஸ் தலைவர் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago