முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 வாரத்தில் தெலுங்கானா தனி மாநிலம்: சந்திரசேகரராவ்

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

நகரி,ஜூலை.16 - ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானாவில் உள்ள அனைத்து கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஐதராபாத்தில் உள்ள இந்திரா பார்க் அருகே 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ராஷ்டிரிய சமீதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் அவர்களது உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அப்போது அவர் தனது தோளில் காங்கிரஸ் துண்டு போர்த்தியிருந்தார். பின்னர் அவர் பேசும் போது, 

தெலுங்கானா தனி மாநில போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அனைவரும் ஓரணியில் நின்று போராடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்னும் 2 வாரத்தில் தெலுங்கானா தனி மாநிலம் கிடைத்து விடும். மத்திய அரசுக்கு தனி மாநிலம் அளிப்பதை தவிர வேறு வழியில்லை. 

தெலுங்கானா மாநிலத்தை ராயலசீமா கடலோர ஆந்திராவை சேர்ந்த பணக்காரர்கள்தான் தடுத்து வருகிறார்கள். அவர்கள் சில அரசியல் தலைவர்களை தூண்டு விட்டு இந்த சதி வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதை நாம் ஒற்றுமையாக இருந்து முறியடிப்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்