முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை குண்டு வெடிப்பு: நடிகர் - நடிகைகள் கண்டனம்

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

மும்பை,ஜூலை.16  - மும்பை குண்டு வெடிப்புக்கு நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மும்பையில் நேற்று முன்தினம் 3 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. ஜவேரி பஜார், ஒபேரா ஹவுஸ், தாதர், கவுதர்கானா ஆகிய 3 இடங்களில் நடந்த இந்த சம்பவத்தில் 22 பேர் பலியானார்கள். 133 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சதி செயலில் ஈடுபட்டது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள்தான் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல்வாதிகள் மட்டுமின்றி, நடிகர், நடிகைகளும் கண்டித்துள்ளனர். நடிகை ஐஸ்வர்யாராய் தனக்கு செவாலியர் விருது வழங்க பிரான்ஸ் தூதரகம் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார். குண்டு வெடிப்புக்கு அவர் கண்டனமும் தெரிவித்தார். இப்போது மேலும் சில நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கோழைத்தனமான செயல் மூலம் மனிதர்களை கொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மனித உயிர்கள் மீது கருணை காட்டுங்கள் என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். நடிகை சிரேயா கூறும் போது, குண்டு வெடிப்பு சம்பவத்தை கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பும் நிலை ஏற்படும் என்று நம்புகிறேன். குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல் நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஜெனிலியா, சினேகா உல்லால் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்