முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் இன்னும் வெடிக்காமல் உள்ள 6 குண்டுகள்?

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஜூலை.17 - மும்பையில் மேலும் 6 இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் இன்னும் வெடிக்காமல் இருப்பதாக செய்திகள் பரவியதால் அங்கு மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். 

மும்பையில் கடந்த 13 ம் தேதி 3 இடங்களில் குண்டு வெடித்ததில் 19 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில் அங்கு அவ்வப்போது புரளிகள் கிளம்பி மக்களை மேலும் பீதியடைய செய்து வருகிறது. 

முதலில் 2 இடங்களில் வெடிக்காத நிலையில் இருந்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. பின்னர் அது வெறும் புரளி எனத் தெரியவந்தது. இந்நிலையில் மேலும் 6 இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை வெடிக்காமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அவ்வாறு குண்டுகள் எதுவும் இல்லை என்றும், அது வெறும் புரளி என்றும் உண்மையை எடுத்துக் கூறி போலீசார் மக்களை அமைதிப்படுத்தினர். மேலும் இது போன்ற புரளிகளை நம்ப வேண்டாம் என்றும் மக்களை கேட்டுக் கொண்டனர். போலீசாரின் உறுதிமொழிக்கு பிறகே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்